Newsதுருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

-

துருக்கியின் நூர்தாகி பகுதியில் இன்று 4.3 ரிச்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி – சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து, அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், இரவு பகல் என பாராமல் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, நேற்று 5.5 மற்றும் 5.7 என இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் நூர்தாகி பகுதியில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

மேலும், இதுவரை பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட 38 வயது பிரபலம் மரணம்

ரஷ்யாவின் மாஸ்கோவில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், பிரபல கவர்ச்சி நடிகை Yulia Burtseva காலமானார். இன்ஸ்டாகிராமில் 74,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட...

வெனிசியூலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்

வெனிசியூலாவின் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04...

பிரித்தானியாவில் பனிப்பொழிவு – போக்குவரத்து, கல்வி பாதிப்பு

பிரித்தானியாவில் கிறிஸ்மஸ் விடுமுறை முடிந்து மக்கள் பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல பகுதிகளில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வடக்கு ஸ்கொட்லாந்தில்...

ஒரு சிறிய தவறு பெரும் இழப்பில் முடிந்த கதை

வீட்டில் ஏற்பட்ட கவனக்குறைவு காரணமாக, ஒரு ஆஸ்திரேலிய குடும்பம் தனது செல்லப்பிராணியின் உயிரைக் காப்பாற்ற $3,000க்கும் அதிகமாகச் செலவிட வேண்டியுள்ளது. விக்டோரியாவைச் சேர்ந்த Anjum என்ற பெண்,...

அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட 38 வயது பிரபலம் மரணம்

ரஷ்யாவின் மாஸ்கோவில் அழகுசாதன அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், பிரபல கவர்ச்சி நடிகை Yulia Burtseva காலமானார். இன்ஸ்டாகிராமில் 74,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட...

வெனிசியூலாவின் சொத்துக்களை முடக்கிய சுவிட்சர்லாந்து அரசாங்கம்

வெனிசியூலாவின் ஜனாதிபதி அமெரிக்க படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் உள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பெடரல் கவுன்சில் இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது. குறித்த சொத்துக்கள் 04...