Newsதுருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் - பீதியில் மக்கள்

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

-

துருக்கியின் நூர்தாகி பகுதியில் இன்று 4.3 ரிச்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள காசியான்டெப் நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காசியான்டெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி – சிரியாவில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து, அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இதனால் ஒரே நாளில் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில், இரவு பகல் என பாராமல் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து, நேற்று 5.5 மற்றும் 5.7 என இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியின் நூர்தாகி பகுதியில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

மேலும், இதுவரை பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு அரசியல் போராளி மறைவு!

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியாற்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை அரசு மற்றும் ஆங்கிலேயே உறவுகளுக்கு...

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

24 மணி நேர McDonald’s-ஐ எதிர்க்கும் மெல்பேர்ண் கவுன்சில்

மெல்பேர்ண், நார்த்கோட்டில் உள்ள High Street-இல் 24 மணி நேரமும் இயங்கும் புதிய McDonald’s உணவகத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டமிடல் விண்ணப்பத்திற்கு எதிராக...

மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள டாஸ்மேனிய அரசாங்கம்

குடும்ப உறுப்பினர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பாகங்களை தக்கவைத்துக் கொள்ளும் கடந்த கால நடைமுறைக்கு மன்னிப்பு கோருவதாக டாஸ்மேனிய...