Sportsஐபிஎல் கிரிக்கெட்: 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி...

ஐபிஎல் கிரிக்கெட்: 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

-

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. 


டாஸ் வென்ற  டெல்லி அணியின் கேப்டன் ரிஷப்  பண்ட்  பந்துவீச்சை தேர்வு செய்தார்.  அதன்படி சென்னை அணி முதலில் களமிறங்கியது.தொடக்க வீரர்கள் டெவன் கான்வேயும் – ருதுராஜ் கெய்க்வாட்டும் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி சிறப்பாக விளையாடினர்.


41 ரன்கள் எடுத்த நிலையில் நோர்ட்ஜெ பந்துவீச்சில்  கெய்க்வாட் ஆட்டமிழந்தார்.  49 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்த நிலையில் டெவான் கான்வே கலீல் அஹமத் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். துபே 32 ரன்களும், கேப்டன் தோனி 8 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர்.


20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி  6 விக்கெட் இழப்பிற்கு  208 ரன்கள் குவித்தது. 
209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் துவக்க வீரர் டேவிட் வார்னர் 19 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.  மிட்சல் மார்ஷ் 25 ரன்னும், ரிஷப் பந்த் 21 ரன்னும், சர்துல் தாக்கூர் 24 ரன்னும் அடித்தனர். 


மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். டெல்லி அணி 17.4 ஓவர் முடிவில் 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 


இதையடுத்து சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக மொயின் அலி 3 விக்கெட்களும், முகேஷ் சௌத்ரி, சமர்ஜித் சிங், பிராவோ தலா 2 விக்கெட்களும் எடுத்தனர்.

Latest news

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...