Newsஇலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்...பிரதமர் நரேந்திர மோடி உறுதி

இலங்கைக்கு இந்தியாவின் உதவி தொடரும்…பிரதமர் நரேந்திர மோடி உறுதி

-

பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மாநில தலைநகர் சென்னைக்கு வந்தார். அவருக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சிலப்பதிகாரம் புத்தகத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழக பாரம்பரிய முறைப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திட்டங்களை துவக்கி வைத்த பிறகு விழாவில் உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் வணக்கம் என கூறி தனது உரையை துவங்கினார். தமிழ் பற்றியும், தமிழர்கள் பற்றியும், இந்தியாவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு பற்றியும் புகழ்ந்து பேசினார். மகாகவி பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே” என்ற வரிகளை குறிப்பிட்ட பிரதமர், தமிழர்களின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருப்பதை பெருமையுடன் கூறினார்.

“தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாச்சாரத்தை விரிவுபடுத்த இந்திய அரசு கடமைப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தை சேர்ந்த யாராவது ஒருவர் தலை சிறந்தவராக விளங்குகிறார். இந்தியா வென்ற 16 பதக்கங்களில் தமிழகத்தை சேர்ந்த 6 பேருக்கு பங்கு உள்ளது. செவித்திறன் குறைபாடுடையோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய கல்வி கொள்கையில் இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். நட்பு நாடான இலங்கை நெருக்கடியில் இருந்து மீளவும், பொருளாததார தேக்க நிலையில் இருந்து மீண்டு வரவும் இந்தியா தொடர்ந்து உதவும். இலங்கைக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து செய்யப்படும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக ஏராளமான உதவிகளை இந்தியா செய்து வருகிறது” என பிரதமர் நரேந்திர மோடி விழாவில் தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 1 முதல் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு வாங்குபவர்கள் வீடுகளை வாங்குவதைத் தடை செய்வதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வீட்டுவசதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய...

இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார் போப்

ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புனித திருத்தந்தை பிரான்சிஸ், இன்று மருத்துவமனையை விட்டு வெளியேறத் தயாராகி வருகிறார். அதன்படி, போப்பிற்கு மருந்து சிகிச்சையுடன் சுமார் 2...

வீட்டிலிருந்து வேலை செய்யும் முடிவை மாற்றிய அல்பானீஸ்

வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் எடுத்த முடிவு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அல்பானீஸ் சமீபத்தில் அரசாங்க அதிகாரிகளை முழுநேரமாக அலுவலகத்தில் பணிபுரியுமாறு தெரிவித்தார். இருப்பினும்,...

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி நெருக்கடிக்கு தீர்வு வழங்கிய ஒரு நிபுணர்

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதிப் பிரச்சினைக்கு ஒரு அற்புதமான தீர்வை ஒரு சொத்து நிபுணர் கண்டுபிடித்துள்ளார். வீட்டுத் திட்டங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வீட்டு விலைகளை மேலும் உயர்த்த வேண்டும் என்று...

மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் நிவாரணம் வழங்கப்படும் – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியர்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு மேலும் கட்டண நிவாரணம் வழங்க பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். அதன்படி, தற்போது வழங்கப்படும் $300 கட்டணச் சலுகை $450 ஆக...

ஆஸ்திரிய பல்கலைக்கழகங்களுக்கு இனி நிதியளிக்கப் போவதில்லை – டிரம்ப் 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் நிதி வெட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டதால், ஏழு முக்கிய ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி திட்டங்கள் சீர்குலைந்துள்ளன. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம், சிட்னி தொழில்நுட்ப...