Perthபிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண் தொடர்பில் வெளியான...

பிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண் தொடர்பில் வெளியான தகவல்

-

அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கார் தீப்பிடித்துக்கொண்டமைக்கு வேறு நபர்கள் எவரும் காரணமாக இருந்திருக்க முடியாது எனவும், காருக்குள் இருந்தவர்களே தீப்பற்றவைத்திருக்க வேண்டுமெனவும் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தமிழ் பெண் பெண் பெர்த் Fiona Stanley வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்தவர் எனவும், ‘தற்கொலையுடன் நடைபெற்றுள்ள இரட்டைக்கொலை’ என்ற கோணத்தில் இவ்விவகாரம் அணுகப்படுவதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகின்றது.

கடந்த ஐந்து வருடங்களாக பெர்த் பகுதியில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் என்றும், சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய வார விடுமுறையில் தகப்பனும் பிள்ளைகளும் தங்களது வீட்டுத் தோட்டத்தில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

பீட்டர் டட்டனின் அலுவலகத்திற்குள் நுழைந்த இளைஞர்கள் குழு!

பிரிஸ்பேர்ணில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனின் அலுவலகத்திற்குள் நுழைந்த இளைஞர்கள் குழுவை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் Mitchelton பகுதியில் சிவப்பு...

விக்டோரியாவில் அதிவேகமாக பரவிவரும் தட்டம்மை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தட்டம்மை வேகமாகப் பரவி வருவதால், விக்டோரிய மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இந்த ஆண்டு இதுவரை விக்டோரியாவில் பதிவான தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை 23...

விக்டோரியாவில் ஒரு பெண்ணின் குளியலறையில் காணப்பட்ட ஒட்டுண்ணி புழு

ஒரு பெண்ணின் குளியலறையில் ஒட்டுண்ணி புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், மத்திய விக்டோரியாவில் ஒரு பெண் தனது குளியல் தொட்டியின் அருகே எதோ அசைவது போல்...

ஆஸ்திரேலியாவில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள வீட்டுவசதி நெருக்கடி

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி நெருக்கடியின் 'சோகமான யதார்த்தத்தை' எடுத்துக்காட்டும் ஒரு புகைப்படம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு பெண் தார்ப்பூச்சின் கீழ் தஞ்சம் புகுந்தது...

டாஸ்மேனிய மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு

ஏராளமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு மருத்துவர் சர்வதேச நீதியை எதிர்கொள்ள நாடு கடத்தப்பட்டுள்ளார். 64 வயதான பொது மருத்துவர் 1990களில் துஷ்பிரயோகம் செய்ததாக...

விக்டோரியாவில் ஒரு பெண்ணின் குளியலறையில் காணப்பட்ட ஒட்டுண்ணி புழு

ஒரு பெண்ணின் குளியலறையில் ஒட்டுண்ணி புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், மத்திய விக்டோரியாவில் ஒரு பெண் தனது குளியல் தொட்டியின் அருகே எதோ அசைவது போல்...