Perthபிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண் தொடர்பில் வெளியான...

பிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண் தொடர்பில் வெளியான தகவல்

-

அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கார் தீப்பிடித்துக்கொண்டமைக்கு வேறு நபர்கள் எவரும் காரணமாக இருந்திருக்க முடியாது எனவும், காருக்குள் இருந்தவர்களே தீப்பற்றவைத்திருக்க வேண்டுமெனவும் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தமிழ் பெண் பெண் பெர்த் Fiona Stanley வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்தவர் எனவும், ‘தற்கொலையுடன் நடைபெற்றுள்ள இரட்டைக்கொலை’ என்ற கோணத்தில் இவ்விவகாரம் அணுகப்படுவதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகின்றது.

கடந்த ஐந்து வருடங்களாக பெர்த் பகுதியில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் என்றும், சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய வார விடுமுறையில் தகப்பனும் பிள்ளைகளும் தங்களது வீட்டுத் தோட்டத்தில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒரு முக்கிய சந்தேக நபரும்...

WA நகரில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்த குழந்தை!

மேற்கு ஆஸ்திரேலிய நகரத்தில் ஒரு குழந்தையின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெர்த்திலிருந்து சுமார் 40 கி.மீ தெற்கே உள்ள பால்டிவிஸில் உள்ள ஒரு...

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, அமெரிக்க அதிபர்...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...