Newsமக்களுக்காக வரியை குறைத்த அவுஸ்திரேலிய அரசு

மக்களுக்காக வரியை குறைத்த அவுஸ்திரேலிய அரசு

-

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக எரிபொருளுக்கான வரியை குறைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒரு லீற்றர் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டு வந்த 44 சதம் என்ற வரி 22 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதியில் சுமார் 48 ரூபாவில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு வாகனங்களை கொண்டுள்ள குடும்பம் ஒன்றுக்கு ஆறு மாத காலத்திற்கு 700 அவுஸ்திரேலிய டெலர்கள் மீதமாகும்.

இது இலங்கை ரூபாயின் பெறுமதியில் இருந்து ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரூபாயாகும். உலகில் எரிபொருள் நெருக்கடி காணப்பட்டாலும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கத்தின் வரி வருவாயை குறைத்துக்கொண்டு அந்த தீர்மானத்தை எடுத்ததாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் கிடைக்கும் வருமானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் வீதி அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது.

நிலவும் நிலைமையின் அடிப்படையில் வீதி அபிவிருத்தியை விட மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்ற தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...