Newsமக்களுக்காக வரியை குறைத்த அவுஸ்திரேலிய அரசு

மக்களுக்காக வரியை குறைத்த அவுஸ்திரேலிய அரசு

-

அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக எரிபொருளுக்கான வரியை குறைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒரு லீற்றர் எரிபொருளுக்கு விதிக்கப்பட்டு வந்த 44 சதம் என்ற வரி 22 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு லீற்றர் எரிபொருளின் விலை இலங்கை ரூபாவின் பெறுமதியில் சுமார் 48 ரூபாவில் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு வாகனங்களை கொண்டுள்ள குடும்பம் ஒன்றுக்கு ஆறு மாத காலத்திற்கு 700 அவுஸ்திரேலிய டெலர்கள் மீதமாகும்.

இது இலங்கை ரூபாயின் பெறுமதியில் இருந்து ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரூபாயாகும். உலகில் எரிபொருள் நெருக்கடி காணப்பட்டாலும் மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், அரசாங்கத்தின் வரி வருவாயை குறைத்துக்கொண்டு அந்த தீர்மானத்தை எடுத்ததாக அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் கிடைக்கும் வருமானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் வீதி அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படுத்தி வருகிறது.

நிலவும் நிலைமையின் அடிப்படையில் வீதி அபிவிருத்தியை விட மக்களுக்கு நிவாரணத்தை வழங்க வேண்டும் என்ற தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.  

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...