Perthபிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண் தொடர்பில் வெளியான...

பிள்ளைகளுடன் காருக்கு தீவைத்து தற்கொலை செய்துகொண்ட தமிழ் பெண் தொடர்பில் வெளியான தகவல்

-

அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பெர்த் தெற்கே Coogee பகுதியில் கடற்கரைக்கு அருகே கடந்த திங்கட்கிழமை காருக்குள்ளிருந்து 40 வயது பெண், 10 வயதுச் சிறுமி மற்றும் 8 வயதுச் சிறுவன் ஆகியோரது சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில், இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போது பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் பிள்ளைகளும் என தெரிவிக்கப்படும் அதேநேரம், இவர்கள் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கார் தீப்பிடித்துக்கொண்டமைக்கு வேறு நபர்கள் எவரும் காரணமாக இருந்திருக்க முடியாது எனவும், காருக்குள் இருந்தவர்களே தீப்பற்றவைத்திருக்க வேண்டுமெனவும் மேற்கு அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தமிழ் பெண் பெண் பெர்த் Fiona Stanley வைத்தியசாலையில் தாதியாகப் பணிபுரிந்தவர் எனவும், ‘தற்கொலையுடன் நடைபெற்றுள்ள இரட்டைக்கொலை’ என்ற கோணத்தில் இவ்விவகாரம் அணுகப்படுவதாக பொலிஸார் தரப்பில் கூறப்படுகின்றது.

கடந்த ஐந்து வருடங்களாக பெர்த் பகுதியில் வசிக்கும் இந்தக் குடும்பத்தினர் மிகவும் அன்பானவர்கள் என்றும், சம்பவம் இடம்பெறுவதற்கு முந்தைய வார விடுமுறையில் தகப்பனும் பிள்ளைகளும் தங்களது வீட்டுத் தோட்டத்தில் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

வேலை செய்யும் பூனைகள் மற்றும் நாய்களுக்கான வரிகளை குறைக்க வேண்டுகோள்

வேலை செய்யும் பூனைகளுக்கு வரிகள் குறைக்கப்பட வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்களும் விவசாயிகளும் கூறுகிறார்கள். பல பண்ணைகளில் தேனீக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பூனைகள் பயன்படுத்தப்படுகின்றன. இது மிகவும் செலவு குறைந்த...

போத்தல்கள் மற்றும் கேன்கள் மூலம் வீட்டு கடனை அடைக்கும் நபர்

ஆஸ்திரேலியாவின் மத்திய கடற்கரையில் உள்ள ஒருவர் போத்தல்கள் மற்றும் கேன்களை சேகரிப்பதன் மூலம் தனது முதல் வீட்டுக் கடனை அடைத்துள்ளார். டேமியன் கார்டன் என்ற இந்த மனிதர்,...

ஆஸ்திரேலிய கால்பந்து ஜாம்பவான் Peter Bosustow காலமானார்!

ஆஸ்திரேலிய கால்பந்து அணியின் பிரபல வீரர் Peter Bosustow, புற்றுநோயுடன் நீண்ட காலமாகப் போராடி இன்று காலை காலமானார். Bosustow இறக்கும் போது அவருக்கு 67 வயது...

தொழில்நுட்ப அறிவின் மூலம் வெற்றி பெற்ற உலகின் இளைய கோடீஸ்வரர்

Lucy Guo என்ற இளம் பெண் உலகின் இளைய சுயமாக உருவாக்கப்பட்ட கோடீஸ்வரராக மாறியுள்ளார். Forbes பத்திரிகையின்படி, உலகின் தலைசிறந்த பாடகர்கள் மற்றும் பாடலாசிரியர்களில் ஒருவரான Taylor...

சிட்னியில் மூடப்படும் பிரபலமான நீச்சல் தளங்கள்

சிட்னியின் வடக்கு கடற்கரையோரத்தில் உள்ள பிரபலமான நீச்சல் இடங்கள் சுறாக்கள் காரணமாக மூடப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று முதல் North Curl Curl கடல் பகுதியை தற்காலிகமாக மூட...

வேக வரம்புகள் குறித்து ஓட்டுநர்களுக்கு விடுக்கப்பட்ட ஆலோசனை

ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் உள்ள ஓட்டுநர்களுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு வேக வரம்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் திறக்கத் தயாராகி வருவதால், பள்ளி மண்டலங்களில் மணிக்கு...