Newsரஷ்யாவை ஓரங்கட்ட ஜெர்மனியுடன் கைகோர்த்துள்ள பிரபல நாடு!

ரஷ்யாவை ஓரங்கட்ட ஜெர்மனியுடன் கைகோர்த்துள்ள பிரபல நாடு!

-

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, எரிபொருளுக்காக அந்நாட்டை பெருமளவில் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஜேர்மனி இறங்கியது.

அதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு மாற்றாக கத்தாரிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டன.

இந்நிலையில், கத்தார் நாடும் ஜேர்மனியும் தங்கள் ஆற்றல் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையிலான, ஹைட்ரஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகம் ஆகியவற்றை மையப்படுத்தி செய்யப்பட்டுள்ள ஒப்பந்தமாகும்.

இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஹைட்ரஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகம் மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தும் வகையில், இரண்டு நாட்டு அலுவலர்களும் இணைந்து செயலாற்ற இருக்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz, உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை ஏரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒருவரான கத்தார், ரஷ்ய இறக்குமதிகளிலிருந்து வேறு பக்கம் திரும்பும் ஜேர்மனியின் திட்டத்தில் மையப்பங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...