Breaking Newsஅவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

-

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கை குடும்பத்தினருக்கு Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படும் என தொழிற்கட்சி, முருகப்பன் நடேசலிங்கம்- கோகிலபத்மப்பிரியா மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தர்னிக்கா ஆகியோருக்கு உறுதிமொழி வழங்கியிருந்தது.

தொழிற்கட்சியின் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள Madeleine King நேற்று மீண்டும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

அவர்களை அவர்களின் சொந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு காலம் செல்லும் என்பதை கூற முடியாது எனவும் ஆனால், கட்டாயம் தொழிற்கட்சி அரசாங்கம் அதற்கு முன்னுரிமை வழங்கும் எனவும் Madeleine King கூறியுள்ளார்.

முருகப்பன் குடும்பத்தை நேசிக்கும் சமூகம் Biloela நகரில் இருப்பதை தான் உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முருகப்பன் குடும்பத்தின் நண்பியும் அவர்களுக்கு ஆதரவான நீண்டகால போராளியுமான Angela Fredericks தொழிற்கட்சியின் அன்டனி ஹெல்பனிஸின் வெற்றியை நேற்று மாலை முருகப்பன் குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

ரொக்க விகித உயர்விற்குப் பிறகு முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறும்?

ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நான்கு முக்கிய வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு...

தனியார் பள்ளி கட்டணம் 6% உயர்வு

ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு

மெல்பேர்ணில் நேற்று ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வடமேற்கு மெல்பேர்ணின் Hillside புறநகர்ப் பகுதியில் உள்ள Penshurst Ctயில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...