Breaking Newsஅவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

-

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கை குடும்பத்தினருக்கு Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படும் என தொழிற்கட்சி, முருகப்பன் நடேசலிங்கம்- கோகிலபத்மப்பிரியா மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தர்னிக்கா ஆகியோருக்கு உறுதிமொழி வழங்கியிருந்தது.

தொழிற்கட்சியின் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள Madeleine King நேற்று மீண்டும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

அவர்களை அவர்களின் சொந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு காலம் செல்லும் என்பதை கூற முடியாது எனவும் ஆனால், கட்டாயம் தொழிற்கட்சி அரசாங்கம் அதற்கு முன்னுரிமை வழங்கும் எனவும் Madeleine King கூறியுள்ளார்.

முருகப்பன் குடும்பத்தை நேசிக்கும் சமூகம் Biloela நகரில் இருப்பதை தான் உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முருகப்பன் குடும்பத்தின் நண்பியும் அவர்களுக்கு ஆதரவான நீண்டகால போராளியுமான Angela Fredericks தொழிற்கட்சியின் அன்டனி ஹெல்பனிஸின் வெற்றியை நேற்று மாலை முருகப்பன் குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

Latest news

அவசரமாக தரையிறங்கிய அந்தோணி அல்பானீஸ் சென்ற விமானம்

ஆஸ்திரேலிய ராயல் விமானப்படை அதிகாரி காயமடைந்ததை அடுத்து, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பயணித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பிரதமர் மற்றும் அவரது குழுவினரை ஏற்றிச் சென்ற விமானம்,...

ஆஸ்திரேலியா சீனா இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்கள்

தென் சீனக் கடலில் பதட்டமான விமானப்படை மோதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய இராணுவ விமானம் அருகே சீன...

குயின்ஸ்லாந்து செவிலியர்களுக்கு 11% சம்பள உயர்வு

குயின்ஸ்லாந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் புதிய $1.8 பில்லியன் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பேரம் பேசும் ஒப்பந்தத்தில் பங்கேற்ற 83.8% செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆதரவாக...

விக்டோரியாவின் மலை ஏறும் தடை இன்னும் நீக்கப்படவில்லை – அரசாங்கம்

விக்டோரியாவில் பாறை ஏறுதலுக்கான தடை நீக்கப்படவில்லை என்பதை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. Grampians (Gariwerd) மற்றும் Mount Arapiles (Dyurrite) பகுதிகளில் ஏற்கனவே உள்ள மற்றும் முன்மொழியப்பட்ட...

ஆஸ்திரேலியா சீனா இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் பதட்டங்கள்

தென் சீனக் கடலில் பதட்டமான விமானப்படை மோதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் மேலும் அதிகரித்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய இராணுவ விமானம் அருகே சீன...

குயின்ஸ்லாந்து செவிலியர்களுக்கு 11% சம்பள உயர்வு

குயின்ஸ்லாந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் புதிய $1.8 பில்லியன் ஊதிய ஒப்பந்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். பேரம் பேசும் ஒப்பந்தத்தில் பங்கேற்ற 83.8% செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் ஆதரவாக...