Breaking Newsஅவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

-

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கை குடும்பத்தினருக்கு Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படும் என தொழிற்கட்சி, முருகப்பன் நடேசலிங்கம்- கோகிலபத்மப்பிரியா மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தர்னிக்கா ஆகியோருக்கு உறுதிமொழி வழங்கியிருந்தது.

தொழிற்கட்சியின் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள Madeleine King நேற்று மீண்டும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

அவர்களை அவர்களின் சொந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு காலம் செல்லும் என்பதை கூற முடியாது எனவும் ஆனால், கட்டாயம் தொழிற்கட்சி அரசாங்கம் அதற்கு முன்னுரிமை வழங்கும் எனவும் Madeleine King கூறியுள்ளார்.

முருகப்பன் குடும்பத்தை நேசிக்கும் சமூகம் Biloela நகரில் இருப்பதை தான் உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முருகப்பன் குடும்பத்தின் நண்பியும் அவர்களுக்கு ஆதரவான நீண்டகால போராளியுமான Angela Fredericks தொழிற்கட்சியின் அன்டனி ஹெல்பனிஸின் வெற்றியை நேற்று மாலை முருகப்பன் குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு

மெத்தம்பேட்டமைன் அல்லது ஐஸ் என்பது சமூகத்தில், குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே வேகமாகப் பரவி வரும் ஒரு ஆபத்தான போதைப் பொருளாகும். ஆஸ்திரேலியாவில் தற்போது பனியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை...

பணத்தைத் திரும்பப் பெறும் மில்லியன் கணக்கான Medibank வாடிக்கையாளர்கள்

மில்லியன் கணக்கான Medibank வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பணத்தைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணம் அதன் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும் என்று...

சமூக ஊடகத் தடை குறித்து குழந்தைகளுக்குப் பரிச்சயப்படுத்த ஒரு அருமையான திட்டம்

ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகள் தற்போது குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்ய முயற்சித்து வருகின்றன. இந்தக் காரணத்திற்காக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இளைஞர்கள்...

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

சமூக ஊடகத் தடை குறித்து குழந்தைகளுக்குப் பரிச்சயப்படுத்த ஒரு அருமையான திட்டம்

ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகள் தற்போது குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்ய முயற்சித்து வருகின்றன. இந்தக் காரணத்திற்காக, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இளைஞர்கள்...

மெல்பேர்ணில் விபத்தில் சிக்கிய கழிவு மறுசுழற்சி லாரி

வீடுகளில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்துமாறு மோனாஷ் மறுசுழற்சி மற்றும் கழிவு மையம் பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது. கடந்த வாரம், Hughesdale-இல் ஒரு மறுசுழற்சி லாரி தீப்பிடித்து எரிந்தது....