Breaking Newsஅவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

அவுஸ்திரேலிய தொழிற்கட்சியின் வெற்றி:இலங்கை குடும்பத்தினருக்கு கிடைத்த அனுமதி

-

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கை குடும்பத்தினருக்கு Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படும் என தொழிற்கட்சி, முருகப்பன் நடேசலிங்கம்- கோகிலபத்மப்பிரியா மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தர்னிக்கா ஆகியோருக்கு உறுதிமொழி வழங்கியிருந்தது.

தொழிற்கட்சியின் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள Madeleine King நேற்று மீண்டும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

அவர்களை அவர்களின் சொந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு காலம் செல்லும் என்பதை கூற முடியாது எனவும் ஆனால், கட்டாயம் தொழிற்கட்சி அரசாங்கம் அதற்கு முன்னுரிமை வழங்கும் எனவும் Madeleine King கூறியுள்ளார்.

முருகப்பன் குடும்பத்தை நேசிக்கும் சமூகம் Biloela நகரில் இருப்பதை தான் உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை முருகப்பன் குடும்பத்தின் நண்பியும் அவர்களுக்கு ஆதரவான நீண்டகால போராளியுமான Angela Fredericks தொழிற்கட்சியின் அன்டனி ஹெல்பனிஸின் வெற்றியை நேற்று மாலை முருகப்பன் குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.

Latest news

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

பண்டிகைக் காலத்தில் வங்கி, அஞ்சல் மற்றும் Centrelink சேவைகள் எப்படி செயல்படும்?

கிறிஸ்துமஸ் மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் நெருங்கி வருவதால், ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள், அஞ்சல் சேவைகள் மற்றும் அரசு நல சேவைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது...

கிறிஸ்துமஸை தொண்டு செயல்கள் மூலம் வெளிப்படுத்தும் ஆஸ்திரேலியர்கள்

கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஆஸ்திரேலியர்கள் தங்கள் சொந்த குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், ஏழை மற்றும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவ தங்கள் நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணிப்பதைக் காண முடிந்தது. சிட்னியின் Ashfield-ல்...

கம்போடியாவுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

தாய்லாந்துடனான எல்லை மோதல்கள் அதிகரித்து வருவதால், கம்போடியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பயணிகள் இதில் கவனம் செலுத்துமாறு...

ஆஸ்திரேலியாவிற்கு மீண்டும் தட்டம்மை எச்சரிக்கை

பாலியிலிருந்து பெர்த்திற்குச் சென்ற JQ111 ஜெட்ஸ்டார் விமானத்தில் பயணித்த ஒருவருக்கு தட்டம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மேற்கு ஆஸ்திரேலியா முழுவதும் அவசர சுகாதார எச்சரிக்கை...

கம்போடியாவுக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

தாய்லாந்துடனான எல்லை மோதல்கள் அதிகரித்து வருவதால், கம்போடியாவிற்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பயணிகள் இதில் கவனம் செலுத்துமாறு...