Newsரஷ்யாவை ஓரங்கட்ட ஜெர்மனியுடன் கைகோர்த்துள்ள பிரபல நாடு!

ரஷ்யாவை ஓரங்கட்ட ஜெர்மனியுடன் கைகோர்த்துள்ள பிரபல நாடு!

-

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, எரிபொருளுக்காக அந்நாட்டை பெருமளவில் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஜேர்மனி இறங்கியது.

அதைத் தொடர்ந்து, ரஷ்யாவுக்கு மாற்றாக கத்தாரிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டன.

இந்நிலையில், கத்தார் நாடும் ஜேர்மனியும் தங்கள் ஆற்றல் கூட்டாண்மையை வலுப்படுத்தும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. அந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையிலான, ஹைட்ரஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகம் ஆகியவற்றை மையப்படுத்தி செய்யப்பட்டுள்ள ஒப்பந்தமாகும்.

இரு நாடுகளுக்கும் இடையில் நேற்று ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் ஹைட்ரஜன் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகம் மற்றும் புதுப்பிக்கும் ஆற்றல் ஆகியவை குறித்து கவனம் செலுத்தும் வகையில், இரண்டு நாட்டு அலுவலர்களும் இணைந்து செயலாற்ற இருக்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேர்மன் சேன்ஸலரான Olaf Scholz, உலகின் மிகப்பெரிய திரவ இயற்கை ஏரிவாயு ஏற்றுமதியாளர்களில் ஒருவரான கத்தார், ரஷ்ய இறக்குமதிகளிலிருந்து வேறு பக்கம் திரும்பும் ஜேர்மனியின் திட்டத்தில் மையப்பங்கு வகிக்கும் என்று கூறியுள்ளார்.

Latest news

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

குயின்ஸ்லாந்தில் ராட்சத காற்றாலை பகுதியை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் மோதி விபத்து

பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...