Newsகுரங்கம்மையால் உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து!

குரங்கம்மையால் உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து!

-

குரங்கம்மையால் உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கு மிதமான அளவு ஆபத்து உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் அது மனிதர்களுக்கிடையே அதிகம் பரவக்கூடிய கிருமியாக உருமாறி, கடுமையாக நோய்வாய்ப்படக்கூடியோரைத் தாக்கினால் பொதுச் சுகாதார அபாயம் அதிகரிக்கலாம் என்று அது கூறியது.

இதுவரை குரங்கம்மை நிரந்தர நோயாகக் கருதப்படாத 23 நாடுகளில் 257 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அது நிரந்தர நோயாகக் கருதப்படாத நாடுகளில் திடீரென ஒரே சமயத்தில் குரங்கம்மைச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதற்குக் காரணம் அது சில காலமாகவே கண்டறியப்படாமல் பரவிக்கொண்டு இருந்திருக்கலாம் என்றும் அண்மையில் நடந்த நிகழ்வுகளில் அதன் பரவல் அதிகரித்திருக்கலாம் என்றும் நிறுவனம் கூறியது.

குரங்கம்மைச் சம்பவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இதுவரை பெரும்பாலான சம்பவங்கள் பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...