Sportsஇலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி - அனைத்து டிக்கெட்டுக்களும்...

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி – அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனை

-

இலங்கை ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா பாரிய வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 38 ஓட்டங்களையும், பெத்தும் நிசங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுக்களையும் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, மூன்று போட்டிகள் கொட்ட ரி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது ரி20 போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

அமெரிக்க-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் முடிவு உலக முடிவின் தொடக்கமா?

உலகின் இரண்டு சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளான அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதால், உலகம் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறது...

குழந்தை பருவ தடுப்பூசிகள் இல்லாததால் ஆஸ்திரேலியாவில் ஆபத்து உள்ள குழந்தைகளின் உயிர்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் Whooping இருமல் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தனிநபர்களால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை அடையாளம் காண்பது ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் செயல்படும்...

பராக் மற்றும் மிஷேல் ஒபாமாவை அவமதிக்கும் வீடியோவைப் பகிர்ந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா மற்றும் மிஷேல் ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியைப் பகிர்ந்து,...

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ள இரு பெரிய வங்கிகள்

ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை உயர்த்திய பிறகு, ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய வங்கிகளான காமன்வெல்த் வங்கி (CBA) மற்றும் Westpac ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான...