Sportsஇலங்கை - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி - அனைத்து டிக்கெட்டுக்களும்...

இலங்கை – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி – அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனை

-

இலங்கை ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுக்களும் விற்பனையாகிவிட்டதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டி கண்டி, பல்லேகெல மைதானத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை நேற்று இடம்பெற்ற இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 போட்டியில் அவுஸ்திரேலியா பாரிய வெற்றியை பதிவு செய்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 128 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க அதிகபட்சமாக 38 ஓட்டங்களையும், பெத்தும் நிசங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தனுஷ்க குணதிலக 26 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுக்களையும் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 14 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

அவ்வணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய அணித்தலைவர் ஆரோன் பின்ச் ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய, மூன்று போட்டிகள் கொட்ட ரி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது.

இரண்டாவது ரி20 போட்டி இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கியுள்ள ரஷ்யா

புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. புற்றுநோய்க்கான M.R.N.A தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பணிப்பாளர் ஆண்ட்ரே...

சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்த திட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை ட்ரம்ப் தீவிரப்படுத்தி வருகிறார். இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த 200...

வாடிக்கையாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க உள்ள ஆஸ்திரேலிய வங்கிகள்

ரொக்க விகிதம் குறைக்கப்பட்டதன் மூலம், ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க தயாராகி வருகின்றன. ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி இன்று ரொக்க விகிதத்தை 4.35...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் உயருமா? 

இந்த நாட்டில் பணவீக்கம் குறித்து மக்களிடையே நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலிலும் பணவீக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில், வாழ்க்கைச்...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் உயருமா? 

இந்த நாட்டில் பணவீக்கம் குறித்து மக்களிடையே நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலிலும் பணவீக்கம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில், வாழ்க்கைச்...

ஆஸ்திரேலியாவின் ரொக்க விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை

ஆஸ்திரேலியாவின் ரொக்க விகிதத்தைக் குறைக்க பெடரல் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய திருத்தத்தின் கீழ், ரொக்க விகிதம் 4.1 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய ரிசர்வ்...