Newsவெளிநாடு செல்ல முயன்ற 64 இலங்கையர்களின் பரிதாப நிலை!

வெளிநாடு செல்ல முயன்ற 64 இலங்கையர்களின் பரிதாப நிலை!

-

நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேரை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 64 பேரை கைது செய்துள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட விரைவு படகு இன்று காலை திருகோணமலைக்கு அருகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது, ​​கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கும் 64 பேரை கைது செய்ததோடு குறித்த மீன்பிடி இழுவை படகையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்களில் 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 03 குழந்தைகள் அடங்குவர்.

குறித்த சந்தேக நபர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Latest news

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...

மெல்பேர்ணில் மூடப்படும் Fletcher Jones Clothing

ஆஸ்திரேலியாவின் பிரபல ஆடை பிராண்டான Fletcher Jones, அதன் அனைத்து சில்லறை கிளைகளையும் ஆன்லைன் வணிகங்களையும் மூடுவதாக அறிவித்துள்ளது. தேசிய அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி...

அதிகரித்து வரும் பள்ளிச் செலவுகளைக் குறைக்க உதவும் வகையில் $800 உதவித்தொகை

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதற்கான செலவு கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், பெற்றோருக்கு நிவாரணம் வழங்க பசுமைக் கட்சி ஒரு புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு...