Newsவெளிநாடு செல்ல முயன்ற 64 இலங்கையர்களின் பரிதாப நிலை!

வெளிநாடு செல்ல முயன்ற 64 இலங்கையர்களின் பரிதாப நிலை!

-

நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேரை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 64 பேரை கைது செய்துள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட விரைவு படகு இன்று காலை திருகோணமலைக்கு அருகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது, ​​கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கும் 64 பேரை கைது செய்ததோடு குறித்த மீன்பிடி இழுவை படகையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்களில் 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 03 குழந்தைகள் அடங்குவர்.

குறித்த சந்தேக நபர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...