Newsவெளிநாடு செல்ல முயன்ற 64 இலங்கையர்களின் பரிதாப நிலை!

வெளிநாடு செல்ல முயன்ற 64 இலங்கையர்களின் பரிதாப நிலை!

-

நாட்டிலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேரை கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் இன்று காலை கிழக்கு கடற்பரப்பில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 64 பேரை கைது செய்துள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட விரைவு படகு இன்று காலை திருகோணமலைக்கு அருகில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவை படகு ஒன்றை இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.

சோதனையின் போது, ​​கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கும் 64 பேரை கைது செய்ததோடு குறித்த மீன்பிடி இழுவை படகையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டவர்களில் 50 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 03 குழந்தைகள் அடங்குவர்.

குறித்த சந்தேக நபர்கள் திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Latest news

பீட்டர் டட்டனின் அலுவலகத்திற்குள் நுழைந்த இளைஞர்கள் குழு!

பிரிஸ்பேர்ணில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனின் அலுவலகத்திற்குள் நுழைந்த இளைஞர்கள் குழுவை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் Mitchelton பகுதியில் சிவப்பு...

விக்டோரியாவில் அதிவேகமாக பரவிவரும் தட்டம்மை – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

தட்டம்மை வேகமாகப் பரவி வருவதால், விக்டோரிய மக்கள் விழிப்புடன் இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். இந்த ஆண்டு இதுவரை விக்டோரியாவில் பதிவான தட்டம்மை நோயாளிகளின் எண்ணிக்கை 23...

விக்டோரியாவில் ஒரு பெண்ணின் குளியலறையில் காணப்பட்ட ஒட்டுண்ணி புழு

ஒரு பெண்ணின் குளியலறையில் ஒட்டுண்ணி புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், மத்திய விக்டோரியாவில் ஒரு பெண் தனது குளியல் தொட்டியின் அருகே எதோ அசைவது போல்...

ஆஸ்திரேலியாவில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள வீட்டுவசதி நெருக்கடி

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி நெருக்கடியின் 'சோகமான யதார்த்தத்தை' எடுத்துக்காட்டும் ஒரு புகைப்படம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு பெண் தார்ப்பூச்சின் கீழ் தஞ்சம் புகுந்தது...

டாஸ்மேனிய மருத்துவர் மீது பாலியல் குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு

ஏராளமான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு மருத்துவர் சர்வதேச நீதியை எதிர்கொள்ள நாடு கடத்தப்பட்டுள்ளார். 64 வயதான பொது மருத்துவர் 1990களில் துஷ்பிரயோகம் செய்ததாக...

விக்டோரியாவில் ஒரு பெண்ணின் குளியலறையில் காணப்பட்ட ஒட்டுண்ணி புழு

ஒரு பெண்ணின் குளியலறையில் ஒட்டுண்ணி புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், மத்திய விக்டோரியாவில் ஒரு பெண் தனது குளியல் தொட்டியின் அருகே எதோ அசைவது போல்...