Newsகட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகும் விக்டோரியா மாநிலம்!

கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகும் விக்டோரியா மாநிலம்!

-

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம், கட்டாயத் தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் ஆகியன தொடர்பான விதிகள் தளர்த்தப்படும் என்று மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார்.

விமான நிலையத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இருப்பினும் விமானம், ரயில், பேருந்துப் பயணத்தில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம்.

வேலையிடக் கட்டாயத்தடுப்பூசி விதிமுறைகளும் மாற்றம் காணவிருக்கிறது. கல்வி நிலையங்கள், உணவு விநியோகத்துறை போன்றவற்றில் வேலை செய்ய மூன்றாவது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை கைவிடப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் இனி வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

அவர்கள் நேரடியாகத் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் வீட்டிலிருந்து பாடசாலைகளுக்கு வேலையிடங்களுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ உதவிச் சேவைகளைப் பெறவும் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...