Newsகட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகும் விக்டோரியா மாநிலம்!

கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகும் விக்டோரியா மாநிலம்!

-

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம், கட்டாயத் தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் ஆகியன தொடர்பான விதிகள் தளர்த்தப்படும் என்று மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார்.

விமான நிலையத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இருப்பினும் விமானம், ரயில், பேருந்துப் பயணத்தில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம்.

வேலையிடக் கட்டாயத்தடுப்பூசி விதிமுறைகளும் மாற்றம் காணவிருக்கிறது. கல்வி நிலையங்கள், உணவு விநியோகத்துறை போன்றவற்றில் வேலை செய்ய மூன்றாவது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை கைவிடப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் இனி வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

அவர்கள் நேரடியாகத் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் வீட்டிலிருந்து பாடசாலைகளுக்கு வேலையிடங்களுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ உதவிச் சேவைகளைப் பெறவும் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...