Newsகட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகும் விக்டோரியா மாநிலம்!

கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தயாராகும் விக்டோரியா மாநிலம்!

-

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம், கட்டாயத் தடுப்பூசி, தனிமைப்படுத்துதல் ஆகியன தொடர்பான விதிகள் தளர்த்தப்படும் என்று மாநிலச் சுகாதார அமைச்சர் கூறினார்.

விமான நிலையத்தில் முகக்கவசம் அணியத் தேவையில்லை. இருப்பினும் விமானம், ரயில், பேருந்துப் பயணத்தில் இருக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம்.

வேலையிடக் கட்டாயத்தடுப்பூசி விதிமுறைகளும் மாற்றம் காணவிருக்கிறது. கல்வி நிலையங்கள், உணவு விநியோகத்துறை போன்றவற்றில் வேலை செய்ய மூன்றாவது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை கைவிடப்படுகிறது.

கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் இனி வீடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

அவர்கள் நேரடியாகத் தங்கள் சொந்த வாகனங்கள் மூலம் வீட்டிலிருந்து பாடசாலைகளுக்கு வேலையிடங்களுக்கும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அவசர மருத்துவ உதவிச் சேவைகளைப் பெறவும் நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...