Newsஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

ஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

-

ஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 41 பேர் கொண்ட இலங்கையர்கள் குழுவொன்று அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.

இவர்களில் 35 பேர் பெரியவர்கள், மற்ற ஆறு பேர் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களாகும்.

கிறிஸ்மஸ் தீவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதே விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கையர்கள் குழு நேற்று இரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மாலன் ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்களில் 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த கடல் பயணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நேரடியாக பங்களிப்பு செய்த நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Latest news

ஆஸ்திரேலியாவில் விசா பிரச்சனை உள்ளவர்களுக்கு அரசு உதவி

உங்கள் ஆஸ்திரேலிய விசா காலாவதியாகப் போகிறது அல்லது ஏற்கனவே காலாவதியாகிவிட்டால், நீங்கள் குடிவரவு நிலைத் தீர்வு சேவையிலிருந்து (SRSS) உதவி பெறலாம். இந்த சேவை ஆஸ்திரேலியாவில் விசா...

அமெரிக்காவில் அமைதிப் பேரணிக்குப் பிறகு உலகளவில் புத்த மதத்திற்கு அதிக தேவை

புத்த மதம் இப்போது ஒரு சாதாரண வாழ்க்கை முறையாகக் காணப்படுகிறது என்றும், அது ஒரு சில நாடுகளுக்கு மட்டுமேயான மதமாக மட்டுமல்லாமல், உலகத்துடன் இணக்கமான வாழ்க்கை...

கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் முடிவை எதிர்க்கும் நாடுகள் மீது டிரம்ப் நியாயமற்ற வரி விதிப்பு

கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்படுத்துவதை எதிர்த்த 8 ஐரோப்பிய நாடுகள் மீது 10% இறக்குமதி வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்...

Bendigo-இல் கார் கவிழ்ந்ததில் 17 வயது சிறுவன் படுகாயம்

இன்று காலை Bendigo அருகே கார் கவிழ்ந்ததில் 17 வயது இளைஞன் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Elmore-இல் உள்ள Raywood சாலையில் அதிகாலை 2.30...

மெல்பேர்ணில் டாக்சிகள் இரவில் மீட்டர்களைப் பயன்படுத்துவதில்லை என குற்றம்

மெல்பேர்ணில் ஒரு டாக்ஸி ஓட்டுநர் மீட்டரைப் பயன்படுத்த மறுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, நகரின் டாக்ஸி துறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்த விவாதம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது...

Bendigo-இல் கார் கவிழ்ந்ததில் 17 வயது சிறுவன் படுகாயம்

இன்று காலை Bendigo அருகே கார் கவிழ்ந்ததில் 17 வயது இளைஞன் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். Elmore-இல் உள்ள Raywood சாலையில் அதிகாலை 2.30...