Newsஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

ஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

-

ஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 41 பேர் கொண்ட இலங்கையர்கள் குழுவொன்று அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.

இவர்களில் 35 பேர் பெரியவர்கள், மற்ற ஆறு பேர் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களாகும்.

கிறிஸ்மஸ் தீவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதே விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கையர்கள் குழு நேற்று இரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மாலன் ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்களில் 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த கடல் பயணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நேரடியாக பங்களிப்பு செய்த நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Latest news

2026 தேர்தலுக்காக இளைஞர்களுக்கு Gym membership வவுச்சர்களை வழங்கும் ஒரு கட்சி

தெற்கு ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி 2026 தேர்தலுக்கான புதிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது . 18-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு Gym உறுப்பினர் அல்லது விளையாட்டுக் கழக உறுப்பினர் சேர்க்கைக்கு...

தொழிலாளர் கட்சியிலிருந்து ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதி விலகல்

தொழிலாளர் கட்சியின் சக்திவாய்ந்த மாநில அரசியல்வாதியான மறைந்த Tim Picton-இற்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இன்று கூடியிருந்தனர். இன்று...

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

பிகினிகளைத் தடை செய்துள்ள பெர்த் உணவகம்

பெர்த் அருகே உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே உள்ள ஒரு அறிவிப்புப் பலகை சூடான விவாதத்தைத் தூண்டியுள்ளது. கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கடைகள், கடல் மற்றும் மணலால்...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...