Newsஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

ஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தல்!

-

ஆஸ்திரேலியாவில் இருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட 41 பேர் கொண்ட இலங்கையர்கள் குழுவொன்று அவுஸ்திரேலிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு, முல்லைத்தீவு, சிலாபம், உடப்புவ, தொடுவாவ மற்றும் மாரவில ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள்.

இவர்களில் 35 பேர் பெரியவர்கள், மற்ற ஆறு பேர் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களாகும்.

கிறிஸ்மஸ் தீவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இலங்கையர்கள் அழைத்து வரப்பட்டதுடன், 100க்கும் மேற்பட்ட அவுஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அதே விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இலங்கையர்கள் குழு நேற்று இரவு நீர்கொழும்பு மேலதிக நீதவான் மாலன் ஜயசூரிய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்களில் 37 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த கடல் பயணத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நேரடியாக பங்களிப்பு செய்த நால்வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Latest news

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

ஆஸ்திரேலியாவில் 89 குழந்தை பெயர்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 89 பெயர்களைச் சூட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தப் பெயர்களின் அர்த்தம் மற்றும் பல காரணிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 89 பெயர்களையும்...

உலகின் சிறந்த இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இரு ஆஸ்திரேலிய தாவரவியல் பூங்காக்கள்

New York Times பத்திரிகையின்படி, Cranbourne-இல் உள்ள Royal Botanic பூங்காவும், சிட்னியின் oyal Botanic பூங்காவும் உலகின் 25 சிறந்த இடங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளன. இந்தத்...

தலைமையிலிருந்து விலகினார் பசுமைக் கட்சித் தலைவர் Adam Bandt

ஆஸ்திரேலியாவில் பசுமைக் கட்சியின் தலைவரான Adam Bandt, கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். மெல்பேர்ண் தொகுதியில் தொழிற்கட்சியின் Sarah Witty-இடம் தோல்வியடைந்த பிறகு, தனது 15 ஆண்டுகால...