Newsஇலங்கையர்கள் ஆஸ்திரேலியா செல்வதனை தடுக்க படகுகளில் GPS பொருத்தும் ஆஸ்திரேலியா

இலங்கையர்கள் ஆஸ்திரேலியா செல்வதனை தடுக்க படகுகளில் GPS பொருத்தும் ஆஸ்திரேலியா

-

அகதிகளைக் கடத்துவதற்கு மீன்பிடிப்படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு இலங்கையில் உள்ள சுமார் நாலாயிரம் படகளில் GPS பொருத்துவதற்கு ஆஸ்திரேலியா ஏற்பாடு செய்யவுள்ளது.

இவ்வாறு GPS பொருத்தப்படவுள்ள படகுகள் தலைமை மையமொன்றிலிருந்து அவதானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Clare O’Neil கொழும்பில் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

சுமார் ஐந்து லட்சம் டொலர் செலவில் இவ்வாறு படகுகளில் பொருத்தப்படும் அலார ஏற்பாடு, குறிப்பிட்ட படகுகள் ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கோ அல்லது ஏனைய குற்றச்செயல்களுக்கோ பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கு பேருதவியாக அமையும் என்றும் இந்த அலாரமானியை படகிலிருந்து கழற்றுபவர்கள் அரசாங்கத்தினால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...