Newsசிட்னியில் ஆறுகளாகும் வீதிகள் - 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய...

சிட்னியில் ஆறுகளாகும் வீதிகள் – 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய அபாயம்

-

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சிட்டினியில் தொடர்ந்து பெய்த அடைமழையாலும் வெள்ளத்தாலும் சுமார் 50ஆயிரம் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள 23 பகுதிகளில் இயற்கைப் பேரிடர் எச்சரிக்கை நேற்றிரவு விடுக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பிள்ளைப் பராமரிப்புக் கட்டணம், சம்பளத்துடன் கூடிய ஓய்வு ஆகிய நிதியுதவி வழங்கப்படும்.

கனத்த மழையாலும் அணைக்கட்டுகள் வேகமாக திறக்கப்பட்டதாலும் சிட்னி ஆறுகளின் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு உயர்ந்துள்ளன.

65 மில்லிமீட்டர் வரையிலான மழை பெய்யும் என்றும் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் முன்னுரைக்கப்பட்டது.

கார்களிலும் வீடுகளிலும் சிக்கியிருப்போரை வெளியேற்ற மீட்புக் குழுவினர் மும்முரமாகச் செயல்படுகின்றனர்.

19ஆயிரம் வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...