Newsசிட்னியில் ஆறுகளாகும் வீதிகள் - 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய...

சிட்னியில் ஆறுகளாகும் வீதிகள் – 50,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறவேண்டிய அபாயம்

-

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

சிட்டினியில் தொடர்ந்து பெய்த அடைமழையாலும் வெள்ளத்தாலும் சுமார் 50ஆயிரம் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள 23 பகுதிகளில் இயற்கைப் பேரிடர் எச்சரிக்கை நேற்றிரவு விடுக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பிள்ளைப் பராமரிப்புக் கட்டணம், சம்பளத்துடன் கூடிய ஓய்வு ஆகிய நிதியுதவி வழங்கப்படும்.

கனத்த மழையாலும் அணைக்கட்டுகள் வேகமாக திறக்கப்பட்டதாலும் சிட்னி ஆறுகளின் நீர்மட்டம் அபாயகரமான அளவுக்கு உயர்ந்துள்ளன.

65 மில்லிமீட்டர் வரையிலான மழை பெய்யும் என்றும் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் முன்னுரைக்கப்பட்டது.

கார்களிலும் வீடுகளிலும் சிக்கியிருப்போரை வெளியேற்ற மீட்புக் குழுவினர் மும்முரமாகச் செயல்படுகின்றனர்.

19ஆயிரம் வீடுகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...