Newsவெளிநாட்டு தபால் மற்றும் பொதி சேவைகள் இடை நிறுத்தம்

வெளிநாட்டு தபால் மற்றும் பொதி சேவைகள் இடை நிறுத்தம்

-

வெளிநாடுகளுக்கான தபால் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா தபால் திணைக்களம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக சிறிலங்காவுக்கான வானூர்தி சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டு இடை நிறுத்தப்பட்டுள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி அமெரிக்கா, நெதர்லாந்து, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கான வானூர்தி வழியிலான தபால் மற்றும் பொருட்களை ஏற்றுக்கொள்வது மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் வழங்குவதில் உள்ள சிரமம் காரணமாக நாட்டிற்குள் தபால் போக்குவரத்து தாமதமாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

உலகம் முழுவதும் நாடற்றவர்களாக உள்ள மில்லியன் கணக்கான மக்கள்

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர் என்றும், ஆஸ்திரேலியாவிலும் நாடற்றவர்கள் உள்ளனர் என்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் கூறுகிறது. ஆஸ்திரேலியாவில் சுமார் 8,000 நாடற்றவர்கள்...

யூத எதிர்ப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க ஒன்றுபடும் வணிகத் தலைவர்கள்

ஆஸ்திரேலியாவில் வளர்ந்து வரும் யூத-விரோதத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக ஒரு கூட்டாட்சி அளவிலான அரசாங்க ஆணையத்தை நிறுவுமாறு முன்னணி வணிகக் குழுக்கள் பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் கோரிக்கை...

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்

உலகின் அதிக எடை கொண்ட மனிதர் என கின்னஸ் சாதனை படைத்த மெக்சிக்கோவைச் சேர்ந்த ஜுவான் பெட்ரோ பிராங்கோ உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மெக்சிக்கோ வைத்தியசாலையில் கடுமையான...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

39 நாடுகளுக்கு பயணத் தடை விதித்துள்ள அமெரிக்கா

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில், 39 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் புதிய அறிவிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். டிசம்பர்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற மிக வயதான நபர்

45 வயதான Venus Williams, Wildcard நுழைவு பெற்ற பிறகு ஆஸ்திரேலிய ஓபனுக்கு மீண்டும் திரும்ப முடிந்தது. இந்த வாய்ப்பின் காரணமாக, பிரதான சுற்றில் பங்கேற்ற மிக...