Newsவேலைவாய்ப்புடன் ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

வேலைவாய்ப்புடன் ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

-

மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் ஆஸ்திரேலியாவில் குடியேற இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு ஆஸ்திரேலிய state nomination-க்கு ranking system ஊடாக தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும்.

மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் மேற்கு ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

General அல்லது Graduate பிரிவுகளின் கீழ் state nomination-க்கு விண்ணப்பிக்க முடியும். இதேவேளை Graduate stream-இன் கீழ் அதிகளவானோர் விண்ணப்பிக்க வசதியாக, மேற்கு ஆஸ்திரேலியாவின் Graduate Occupation List விரிவாக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட தொழில்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறித்த தொழிற்பட்டியல் கீழே தரப்பட்டுள்ள அதேநேரம், இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள migration.wa.gov.au என்ற இணைப்பிற்கு செல்லவும்

Latest news

கிரெடிட் கார்டுகளால் அதிகமான கடனில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்கள் அன்றாட செலவுகளை ஈடுகட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதாக ஃபைண்டரின் புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்வதில், ஒப்பீட்டு வலைத்தளம் ஒன்று வெளியிட்ட ஒரு...

iPhone 17 model-ஐ வெளியிட்டுள்ளது Apple

2025 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தொழில்நுட்ப வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் iPhone 17 model-ஐ Apple வெளியிட்டுள்ளது. இதன் விலை US$899 இல் தொடங்கும் என்றும், iPhone...

ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க உள்ள ANZ

அடுத்த 12 மாதங்களில் ஆயிரக்கணக்கான வேலைகளை குறைக்க ANZ தயாராகி வருகிறது. நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், செப்டம்பர் 2026 க்குள் சுமார் 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய...

எதிர்ப்புகளைத் தொடர்ந்து சமூக ஊடகத் தடையை நீக்கியது நேபாளம்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடைக்கு எதிரான போராட்டத்தில் 19 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சமூக ஊடகத் தடையை நீக்க நேபாள அரசு முடிவு செய்துள்ளது. நேபாள அரசாங்கம்...

விக்டோரியன் அரசாங்கத்திற்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான ஒரு வரலாற்று ஒப்பந்தம்

விக்டோரியா பழங்குடியினர் மற்றும் Torres Strait தீவுவாசிகள் சார்பாக நாடாளுமன்றத்தில் ஒரு ஒப்பந்த மசோதாவை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக விக்டோரியா மாறியுள்ளது. முன்மொழியப்பட்ட ஒப்பந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்,...

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...