Newsஆஸ்திரேலியாவில் மருத்துவமனைகளில் நெருக்கடி!

ஆஸ்திரேலியாவில் மருத்துவமனைகளில் நெருக்கடி!

-

ஆஸ்திரேலியாவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் மருத்துவமனையில் சிகிச்சைபெறச் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை நெருங்குகிறது.

ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சுமார் 5,300 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

நிலைமை கடுமையாவதைத் தவிர்க்க அதிகாரிகள் மக்களை வீட்டிலிருந்தவாறு வேலைசெய்யும் நடைமுறைக்குத் திரும்பும்படிக் கேட்டுக்கொண்டனர்.

அந்நாட்டில் 3ஆம் முறையாகப் பெரிய அளவில் ஓமக்ரான்வகைக் கோவிட் பரவல் இடம்பெறுகிறது. BA.4, BA.5 ரக ஓமிக்ரோன் கிருமிகள் அதிவேகத்தில் பரவக்கூடியவை.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஒருவாரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை
300,000ஐத் தாண்டியது.

நேற்று கொரோனா தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 50,000ஐ எட்டியது. கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவில் அது அமைந்தது.

Latest news

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

பெர்த்தில் நேருக்கு நேர் மோதிய இரு மோட்டார் சைக்கிள்கள் – ஓட்டுநர்கள் பலி

பெர்த்தின் மேற்கு புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். Wembley-இல் உள்ள Pangbourne தெருவுக்கு அருகிலுள்ள Grantham தெருவில் இரவு 10.50...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...