Newsஅனைத்து கட்சி அரசாங்கம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நியமிப்பு

அனைத்து கட்சி அரசாங்கம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நியமிப்பு

-

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து கட்சி அரசாங்களம் நியமிக்கப்படும் என்று சிங்கள நாளேட்டின் இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிரந்தர அமைச்சரவை ஒன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் ஜனநாயக முற்போக்கு கூட்டணி, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரிசாட் பதியுதீனின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் குழுக்கள் இந்த புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளன.

அதற்காக எதிர்காலத்தில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க அந்தக் கட்சிகளையும் குழுக்களையும் அழைப்பார் என அறியப்படுகின்றது.

புதிய அமைச்சரவையில் 20 முதல் 37 அமைச்சர்கள் இருப்பார்கள், அதே எண்ணிக்கையிலான அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, முன்னாள் அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையாக நேற்று வெள்ளிக்கிழமை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதுடன், நிரந்தரமாக்கும் போது அமைச்சர்களின் வீச்சும் மாறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

myGov-ஐ Update செய்தால், 3 நாட்களில் பணம் பெறுவீர்கள்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் இன்னும் உரிமை கோரப்படாத மருத்துவப் பலன்களை வைத்திருப்பதாக Services Australia வெளிப்படுத்தியுள்ளது. myGov அமைப்பில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப்...

குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் மறைந்திருக்கும் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வு தேவை

குழந்தை பராமரிப்பு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான மத்திய அரசின் உத்தரவின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு சேவைகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளதாக குழந்தை...

2025 ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள்

2025 ஆம் ஆண்டு உலகில் பல்வேறு எழுச்சிகளால் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கருதப்படுகிறது. காசா போர் நிறுத்தங்கள், அமெரிக்க அரசியல் வரிகள், பேரழிவு தரும் காட்டுத்தீ மற்றும் போப்பின்...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களை விட பெரியவர்களிடையே இருக்கும் அதிக போதை பழக்கம்

ஆஸ்திரேலியர்களில் வயதானவர்கள் தேசிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மது அருந்துவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனத்தின் (AIHW) அறிக்கை, 50 மற்றும்...