Newsஅனைத்து கட்சி அரசாங்கம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நியமிப்பு

அனைத்து கட்சி அரசாங்கம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நியமிப்பு

-

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து கட்சி அரசாங்களம் நியமிக்கப்படும் என்று சிங்கள நாளேட்டின் இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைத்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான கட்சிகள் மற்றும் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிரந்தர அமைச்சரவை ஒன்று எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுன, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் ஜனநாயக முற்போக்கு கூட்டணி, ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரிசாட் பதியுதீனின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் மற்றும் குழுக்கள் இந்த புதிய அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளன.

அதற்காக எதிர்காலத்தில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க அந்தக் கட்சிகளையும் குழுக்களையும் அழைப்பார் என அறியப்படுகின்றது.

புதிய அமைச்சரவையில் 20 முதல் 37 அமைச்சர்கள் இருப்பார்கள், அதே எண்ணிக்கையிலான அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, முன்னாள் அமைச்சரவை இடைக்கால அமைச்சரவையாக நேற்று வெள்ளிக்கிழமை அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதுடன், நிரந்தரமாக்கும் போது அமைச்சர்களின் வீச்சும் மாறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

ஆஸ்திரேலியாவில் 89 குழந்தை பெயர்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு 89 பெயர்களைச் சூட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தப் பெயர்களின் அர்த்தம் மற்றும் பல காரணிகளால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 89 பெயர்களையும்...

உலகின் சிறந்த இடங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள இரு ஆஸ்திரேலிய தாவரவியல் பூங்காக்கள்

New York Times பத்திரிகையின்படி, Cranbourne-இல் உள்ள Royal Botanic பூங்காவும், சிட்னியின் oyal Botanic பூங்காவும் உலகின் 25 சிறந்த இடங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளன. இந்தத்...

தலைமையிலிருந்து விலகினார் பசுமைக் கட்சித் தலைவர் Adam Bandt

ஆஸ்திரேலியாவில் பசுமைக் கட்சியின் தலைவரான Adam Bandt, கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். மெல்பேர்ண் தொகுதியில் தொழிற்கட்சியின் Sarah Witty-இடம் தோல்வியடைந்த பிறகு, தனது 15 ஆண்டுகால...