Breaking Newsசிட்னியில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - சிக்கிய காதலன்

சிட்னியில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த துயரம் – சிக்கிய காதலன்

-

சிட்னியில் மாயமான காதலியை, எங்கிருந்தாலும் திரும்பி வருமாறு முறையிட்ட காதலன் கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.

சிட்னியில் இந்தியவம்சாவளி ஷெரீன் குமாரின் சடலம் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, 37 வயதான வின்சென்ட் கார்லினோ என்பவர் கைது செய்யப்பட்டார்.

புதன்கிழமை மாலை மாயமான நிலையில் நேற்று ஷெரீன் மற்றும் கார்லினோ தம்பதி வசித்து வந்த குடியிருப்பில் இருந்து சிறிது தூரத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஷெரீன் குமார் கொலை வழக்கு தொடர்பில் கார்லினோ கைது செய்யப்பட்டார்.

மட்டுமின்றி, தமது காதலி மாயமானதில் மனத்துயரத்தில் உள்ளதாகவும், தகவல் தெரியவரும் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் எனவும் கார்லினோ கோரியிருந்தார்.

குடியிருப்பில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியே சென்ற ஷெரீன் குமார் மீண்டும் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்றே கார்லினோ தெரிவித்திருந்தார்.

43 வயதான ஷெரீன் குமாரின் பிள்ளைகள் அவரது முன்னாள் கணவரின் கவனிப்பில் உள்ளனர். பிரபல மொடலாகவும் நாய் தொடர்பான தொழில் செய்து வருபவருமான ஷெரீன் குமார் கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.

விரிவான விசாரணைக்கு பின்னரே, இந்த வழக்கின் பின்னணி தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...