Breaking Newsசிட்னியில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த துயரம் - சிக்கிய காதலன்

சிட்னியில் இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த துயரம் – சிக்கிய காதலன்

-

சிட்னியில் மாயமான காதலியை, எங்கிருந்தாலும் திரும்பி வருமாறு முறையிட்ட காதலன் கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.

சிட்னியில் இந்தியவம்சாவளி ஷெரீன் குமாரின் சடலம் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, 37 வயதான வின்சென்ட் கார்லினோ என்பவர் கைது செய்யப்பட்டார்.

புதன்கிழமை மாலை மாயமான நிலையில் நேற்று ஷெரீன் மற்றும் கார்லினோ தம்பதி வசித்து வந்த குடியிருப்பில் இருந்து சிறிது தூரத்தில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஷெரீன் குமார் கொலை வழக்கு தொடர்பில் கார்லினோ கைது செய்யப்பட்டார்.

மட்டுமின்றி, தமது காதலி மாயமானதில் மனத்துயரத்தில் உள்ளதாகவும், தகவல் தெரியவரும் பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும் எனவும் கார்லினோ கோரியிருந்தார்.

குடியிருப்பில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் வெளியே சென்ற ஷெரீன் குமார் மீண்டும் குடியிருப்புக்கு திரும்பவில்லை என்றே கார்லினோ தெரிவித்திருந்தார்.

43 வயதான ஷெரீன் குமாரின் பிள்ளைகள் அவரது முன்னாள் கணவரின் கவனிப்பில் உள்ளனர். பிரபல மொடலாகவும் நாய் தொடர்பான தொழில் செய்து வருபவருமான ஷெரீன் குமார் கொலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது.

விரிவான விசாரணைக்கு பின்னரே, இந்த வழக்கின் பின்னணி தெரியவரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...