Breaking Newsஆஸ்திரேலியா விசா பெற விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான தகவல்!

ஆஸ்திரேலியா விசா பெற விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்களை அவசரமாக பரிசீலிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகார அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸ், அந்த நோக்கத்திற்காக அதிக பணியாளர்களை நியமிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுமார் 10 லட்சம் ஆஸ்திரேலிய விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்-சுற்றுலா மற்றும் பயிற்சி விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் இருந்து, நாட்டிற்கு வெளியே அனுப்பப்பட்ட 645,000 விண்ணப்பங்கள் உட்பட 745,000 விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

இதில் 388,000 சுற்றுலா விசாக்கள், 62,000 மாணவர் விசாக்கள் மற்றும் 9,550 தற்காலிக பயிற்சி விசாக்கள் அடங்கும்.

அதிகளவான மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் எனவும், தொழிலாளர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உதவ முடியும் எனவும் குடிவரவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குவிந்துள்ள விண்ணப்பங்களை கருத்தில் கொண்டு, ஒரே இரவில் குறிப்பிடத்தக்க குறைப்பை செய்ய முடியாது என்று குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் வலியுறுத்துகிறார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...