Breaking Newsஆஸ்திரேலியா விசா பெற விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான தகவல்!

ஆஸ்திரேலியா விசா பெற விண்ணப்பித்தவர்களுக்கு வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் நிலுவையில் உள்ள விசா விண்ணப்பங்களை அவசரமாக பரிசீலிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

குடிவரவு, குடியுரிமை மற்றும் பல்கலாச்சார விவகார அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸ், அந்த நோக்கத்திற்காக அதிக பணியாளர்களை நியமிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுமார் 10 லட்சம் ஆஸ்திரேலிய விசா விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்-சுற்றுலா மற்றும் பயிற்சி விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில் இருந்து, நாட்டிற்கு வெளியே அனுப்பப்பட்ட 645,000 விண்ணப்பங்கள் உட்பட 745,000 விசா விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

இதில் 388,000 சுற்றுலா விசாக்கள், 62,000 மாணவர் விசாக்கள் மற்றும் 9,550 தற்காலிக பயிற்சி விசாக்கள் அடங்கும்.

அதிகளவான மக்கள் ஆஸ்திரேலியாவிற்கு வந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முடியும் எனவும், தொழிலாளர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உதவ முடியும் எனவும் குடிவரவு அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குவிந்துள்ள விண்ணப்பங்களை கருத்தில் கொண்டு, ஒரே இரவில் குறிப்பிடத்தக்க குறைப்பை செய்ய முடியாது என்று குடிவரவு அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் வலியுறுத்துகிறார்.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...