Newsகோட்டாபயவுக்கு சிங்கப்பூர் வழங்கிய அனுமதி!

கோட்டாபயவுக்கு சிங்கப்பூர் வழங்கிய அனுமதி!

-

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் சென்றபோது வழங்கப்பட்ட குறுகிய கால பயண அனுமதி (short term visit pass) 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாரிய எதிர்ப்பு போராட்டங்களையடுத்து கடந்த 13 ஆம் திகதி இலங்கையை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறி, கடந்த 14 ஆம் திகதி மாலைதீவு வழியாக சிங்கப்பூர் சென்றடைந்தார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் புகலிடம் கோரவில்லை அல்லது வழங்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் முந்தைய அறிக்கையில், சிங்கப்பூரின் குடிவரவு திணைக்களம், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் குறுகிய கால பயண அனுமதி (STVP) வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.

Latest news

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

குறைந்து வரும் Lifeblood-இன் இரத்த விநியோகம்

ஆஸ்திரேலியாவின் இரத்த விநியோகம் கடுமையான சிக்கலில் இருப்பதாக LifeBlood எச்சரித்துள்ளது. இரத்தம் பெறுவதை விட வேகமாக நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதன் மூலம், O negative மற்றும் A negative...

மோசடி அழைப்புகள் குறித்து 90% ஆஸ்திரேலியர்களை எச்சரிக்கும் Australia Post

கிறிஸ்துமஸ் காலத்தில் மோசடிகள் அதிகரிக்கும் என்று Australia Post பொதுமக்களை எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸுக்கு முந்தைய காலம் மோசடி செய்பவர்களுக்கு வளமான காலம் என்று அது கூறுகிறது. ஆன்லைன்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...