NoticesTamil Community Eventsயாழ் பல்கலை மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம்!

யாழ் பல்கலை மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம்!

-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தின் முதலாவது அணி மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வின் அறிமுக வைபவம் நேற்று 27 ஆம் திகதி காலை 8 மணி முதல் இடம்பெற்றது.

பல்கலைக்கழக வளாகத்தினுள் அமந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேக ஆராதனைகளையடுத்து, கைலாசபதி கலையரங்கில் நிழ்வுகள் ஆரம்பமாகின.

க. பொ. த உயர்தர 2019 ஆம் ஆண்டு கலைப் பிரிவில் தோற்றி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் கலைப் பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களில் சுமார் 50 மாணவர்கள் இந்து கற்கைகள் பீடத்தில் 2020 / 2021 ஆம் கல்வியாண்டுக்காகப் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.

இவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வே நேற்று 27 ஆம் திகதி, புதன்கிழமை காலை அறிமுக வைபவத்துடன் ஆரம்பமாகியது.

இந்து கற்கைகள் பீடாதிபதி கலாநிதி சுகந்தினி ஶ்ரீ முரளீதரன் தலைமையில் இடம்மெற்ற இந்த அறிமுக நிகழ்வில் தவத்திரு.வேலன் சுவாமிகள், யாழ். பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினரும், சைவசமயப் பெரியாருமான செஞ்சொற் செல்வர் ஆறு. திருமுருகன், முன்னாள் துணைவேந்தர்களான பேராசியர் என். சண்முகலிங்கன், வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை மற்றும் முன்னாள் பீடாதிபதிகள் மற்றும் துறைத் தலைவர்கள், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், பதிவாளர் வி. காண்டீபன், நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி. ராஜ் உமேஷ், துறைத் தலைவர்கள், நிர்வாக அலுவலர்கள், பதில் நூலகர் மற்றும் விரிவுரையாளர்கள், புதுமுக மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

Latest news

myGov-ஐ Update செய்தால், 3 நாட்களில் பணம் பெறுவீர்கள்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் இன்னும் உரிமை கோரப்படாத மருத்துவப் பலன்களை வைத்திருப்பதாக Services Australia வெளிப்படுத்தியுள்ளது. myGov அமைப்பில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப்...

குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் மறைந்திருக்கும் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வு தேவை

குழந்தை பராமரிப்பு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான மத்திய அரசின் உத்தரவின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு சேவைகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளதாக குழந்தை...

2025 ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகள்

2025 ஆம் ஆண்டு உலகில் பல்வேறு எழுச்சிகளால் உருவாக்கப்பட்ட ஆண்டாகக் கருதப்படுகிறது. காசா போர் நிறுத்தங்கள், அமெரிக்க அரசியல் வரிகள், பேரழிவு தரும் காட்டுத்தீ மற்றும் போப்பின்...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

கலிபோர்னியாவில் கிறிஸ்துமஸ் புயல் – மூவர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சலஸ் பகுதிகளில் கிறிஸ்துமஸ் புயல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதோடு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3...

ஆஸ்திரேலியாவில் இளைஞர்களை விட பெரியவர்களிடையே இருக்கும் அதிக போதை பழக்கம்

ஆஸ்திரேலியர்களில் வயதானவர்கள் தேசிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மது அருந்துவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய சுகாதாரம் மற்றும் நலன்புரி நிறுவனத்தின் (AIHW) அறிக்கை, 50 மற்றும்...