Newsவெளிநாட்டுக் கடனால் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தையும் இழந்த இலங்கை!

வெளிநாட்டுக் கடனால் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தையும் இழந்த இலங்கை!

-

சிறிலங்கா அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதை அடுத்து, கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இழந்ததாக Colombo Dockyard நிறுவனம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கப்பல்துறையானது ஜப்பானில் உள்ள ஒனோமிச்சி கப்பல்துறையின் ஒரு அலகாக செயற்படுகின்றது.

எவ்வாறாயினும், வெளிநாட்டுக் கடனை செலுத்தத் தவறிய நிலையில் நோர்வே அரசாங்கம் வழங்கிய இரண்டு கப்பல்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த இரண்டு செயற்பாட்டு ஆதரவு கப்பல்களை (CSOV) உருவாக்குவதற்கான ஒப்பந்தம் நோர்வேயின் எடா விண்ட் ஏஎஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

நாட்டில் நிலவும் உறுதியற்ற பொருளாதார மற்றும் நிதி நிலைமை காரணமாகவே இந்த தீர்மானத்தை எட்ட வேண்டியிருந்தது என்று கொழும்பு கப்பல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், நோர்வே ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டாலும், ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான ஏழு கப்பல் கட்டும் திட்டங்கள் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுவதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...