Newsவெளிநாட்டுக் கடனால் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தையும் இழந்த இலங்கை!

வெளிநாட்டுக் கடனால் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தையும் இழந்த இலங்கை!

-

சிறிலங்கா அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதை அடுத்து, கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இழந்ததாக Colombo Dockyard நிறுவனம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கப்பல்துறையானது ஜப்பானில் உள்ள ஒனோமிச்சி கப்பல்துறையின் ஒரு அலகாக செயற்படுகின்றது.

எவ்வாறாயினும், வெளிநாட்டுக் கடனை செலுத்தத் தவறிய நிலையில் நோர்வே அரசாங்கம் வழங்கிய இரண்டு கப்பல்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த இரண்டு செயற்பாட்டு ஆதரவு கப்பல்களை (CSOV) உருவாக்குவதற்கான ஒப்பந்தம் நோர்வேயின் எடா விண்ட் ஏஎஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

நாட்டில் நிலவும் உறுதியற்ற பொருளாதார மற்றும் நிதி நிலைமை காரணமாகவே இந்த தீர்மானத்தை எட்ட வேண்டியிருந்தது என்று கொழும்பு கப்பல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், நோர்வே ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டாலும், ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான ஏழு கப்பல் கட்டும் திட்டங்கள் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுவதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

இந்தோனேசியாவுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்திற்கு தயாராகும் பிரதமர் அல்பானீஸ்

இந்தோனேசியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். நேற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

“அடுத்த சில மாதங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான நேரம்” – அரசியல் ஆய்வாளர்கள்

அடுத்த சில மாதங்கள் ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸுக்கு ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவரது திறமையும்,...

ஆஸ்திரேலியாவில் ஒரு சக்திவாய்ந்த பாதாள உலகத் தலைவர் விடுவிக்கப்பட்டார்

ஆஸ்திரேலியாவில் பிரபல பாதாள உலக நபரான Tony Mokbel, தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று மெல்பேர்ண் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரானபோது, ​​அவருக்கு...

மின்-பைக்குகள் குறித்து சுகாதார அமைச்சரிடமிருந்து ஒரு வலுவான அறிக்கை

ஆஸ்திரேலியாவின் வளர்ந்து வரும் மின்-பைக் நெருக்கடி சாலைகளில் பெரும் ஆபத்தாக மாறி வருவதாக ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் Mark Butler கூறியுள்ளார். மின்-பைக்குகளால் ஏற்படும் சாலை விபத்துகள்...

தடைகள் இருந்தாலும் நம்பிக்கையுடன் உலகக் கோப்பையை எதிர்கொள்வேன் – ஆஸ்திரேலிய கேப்டன்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் T20 உலகக் கோப்பைக்கு முந்தைய இறுதிப் பயிற்சி சர்வதேசப் போட்டியையும் மழை காரணமாக அந்த அணி கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் கொழும்பில்...