Newsவெளிநாட்டுக் கடனால் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தையும் இழந்த இலங்கை!

வெளிநாட்டுக் கடனால் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தையும் இழந்த இலங்கை!

-

சிறிலங்கா அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதை அடுத்து, கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை இழந்ததாக Colombo Dockyard நிறுவனம் அறிவித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு கப்பல்துறையானது ஜப்பானில் உள்ள ஒனோமிச்சி கப்பல்துறையின் ஒரு அலகாக செயற்படுகின்றது.

எவ்வாறாயினும், வெளிநாட்டுக் கடனை செலுத்தத் தவறிய நிலையில் நோர்வே அரசாங்கம் வழங்கிய இரண்டு கப்பல்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை இரத்து செய்ய சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த இரண்டு செயற்பாட்டு ஆதரவு கப்பல்களை (CSOV) உருவாக்குவதற்கான ஒப்பந்தம் நோர்வேயின் எடா விண்ட் ஏஎஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

நாட்டில் நிலவும் உறுதியற்ற பொருளாதார மற்றும் நிதி நிலைமை காரணமாகவே இந்த தீர்மானத்தை எட்ட வேண்டியிருந்தது என்று கொழும்பு கப்பல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், நோர்வே ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டாலும், ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கான ஏழு கப்பல் கட்டும் திட்டங்கள் தடையின்றி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுவதாக கொழும்பு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...