Newsஇலங்கையில் முதன் முதலாக மின்சார கார் அறிமுகம்!

இலங்கையில் முதன் முதலாக மின்சார கார் அறிமுகம்!

-

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது முழுமையான மின்சார மோட்டார் காரை ஐடியல் மோட்டர்ஸ் நிறுவனம் சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளது

உலகம் முழுவதிலும் அதிக பிரபல்யம் பெற்ற ஒஸ்டின் மினி மோக்கினால் ஈர்க்கப்பட்ட ஐடியல் மோக்ஷா, இலங்கை கார் சந்தையில் புரட்சியை உருவாக்கும் திறன் கொண்ட கார் நிறுவனமாகும்.

சாரதி மற்றும் 3 பயணிகள் வசதியாக பயணிக்க முடியும் வகையில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த காரை வீட்டில் பயன்படுத்தும் மின்சாரத்தை பயன்படுத்தி சில நிமிடங்களில் சார்ஜ் செய்துக் கொள்ள முடியம்.

இதன் எடை 870 கிலோ மற்றும் 1080 ஆர்பிஎம் வேகம் கொண்டதாகும்.

3 பயணிகள் வசதியாக பயணிக்க முடியும். வெளிப்புற தோற்றம் இரண்டு-தொனி கலவையாகும்.

மேலும், ஐடியல் மோக்ஷா மின்சார மோட்டாருக்கு 2 வருட முழு உத்திரவாதம் மற்றும் வாங்கிய நாளிலிருந்து பேட்டரிக்கு 5 வருட உத்திரவாதம் வழங்கப்படுகின்றது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் மலிவு விலையில் கிடைக்கும் மின்சார காரான Ideal Moksha, இலங்கையில் உள்நாட்டு பயன்பாட்டிற்கு மிகவும் பொருத்தமானதாகும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...