Newsஇலங்கையில் அவசரகால சட்டம்: எச்சரிக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை

இலங்கையில் அவசரகால சட்டம்: எச்சரிக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை

-

அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் தடவையாக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதாக அதில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு, ஜூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது பல தடவைகள் கவலை தெரிவித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையானது அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை சட்டரீதியாக பயன்படுத்துவதை மீறும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் கண்டிக்கிறது.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...