Newsஇலங்கையில் அவசரகால சட்டம்: எச்சரிக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை

இலங்கையில் அவசரகால சட்டம்: எச்சரிக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை

-

அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில் இதனை சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கை அதிகாரிகள் ஏப்ரல் 2ஆம் திகதி முதல் தடவையாக அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியதாக அதில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஜூலை 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர், ஜூலை 17ஆம் திகதி மீண்டும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு, ஜூலை 27ஆம் திகதி பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது பல தடவைகள் கவலை தெரிவித்த போதிலும் அது பலனளிக்கவில்லை என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையானது அமைதியான முறையில் ஒன்றுகூடல் மற்றும் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை சட்டரீதியாக பயன்படுத்துவதை மீறும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மேலும் கண்டிக்கிறது.

Latest news

ஆஸ்திரேலியாவின் பிறப்பு விகிதங்கள் தொடர்ந்து சரிவதற்கான காரணங்கள்

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகையைப் பராமரிக்க போதுமான குழந்தைகள் இல்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. 2006 மற்றும் 2021 க்கு இடையில் 50–54 வயதுடைய குழந்தை இல்லாத பெண்களின்...

புதுமை பெறுகிறது விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் அதிகரித்து வரும் குற்ற விகிதத்தை எதிர்த்துப் போராட விக்டோரியா காவல்துறை புதிய திட்டங்களையும் நடவடிக்கைகளையும் முன்மொழிந்துள்ளது. விக்டோரியா காவல்துறை 10 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாற்றங்களைச்...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கார் திருட்டுகள் – கடுமையாகும் சட்டங்கள்

விக்டோரியாவில் கார் திருட்டு விகிதம் இந்த ஆண்டு 40 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. காப்பீட்டு முகவர்கள் ஒவ்வொரு 44 நிமிடங்களுக்கும் ஒரு கார் திருட்டு...

ஆன்லைனில் கசிந்த அல்பானீஸ், டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்களின் தனிப்பட்ட தகவல்கள்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ், எதிர்க்கட்சித் தலைவர் சூசன் லே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் தனிப்பட்ட தொலைபேசி எண்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன. ஒரு...

மலேசியாவில் குழந்தைகள் மத்தியில் பரவும் நோய்

மலேசியாவில் வேகமாக பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா (influenza) தொற்றுநோய் காரணமாக 6000 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நோயைக் கட்டுப்படுத்த வழிகாட்டுதல்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கடந்த வாரத்தில் 97...

விர்ஜின் ஆஸ்திரேலியா பயணிகளுக்கான புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய விமான நிறுவனமான விர்ஜின் ஆஸ்திரேலியா, பயணிகளுக்கான புதிய சாமான்கள் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, Economy வகுப்பு பயணிகள் அதிக சாமான்களை எடுத்துச் செல்ல முடியும்,...