Newsஇலங்கை வரும் சீன கப்பலால் காத்திருக்கும் ஆபத்து - எச்சரிக்கும் அமெரிக்கா

இலங்கை வரும் சீன கப்பலால் காத்திருக்கும் ஆபத்து – எச்சரிக்கும் அமெரிக்கா

-

சீனாவின் இராணுவ கப்பல்கள் ஹம்பாந்தோட்டையிலிருந்து வெளியேற்றவேண்டும்.

அவ்வாறு செய்யாது போனால், அந்த நாட்டின் மக்கள் விடுதலை இராணுவம் முக்கியமான கப்பல் பாதைகள் மற்றும் பாரசீக வளைகுடாவிற்கு அருகில் மூலோபாயமான இடத்தில் காலூன்றிவிடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை வோசிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரும் சீன கடற்படை கப்பல் ஆயுதமற்ற நிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. அதன் பயணப் பாதை இன்னமும் தெரியவில்லை.

எனினும் தற்போது கப்பலை எப்போது நிறுத்துவது என்பது குறித்து இலங்கை அதிகாரிகள் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரி ஒருவரை கோடிட்டு வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது

கடந்த ஒரு வாரமாக, 730 அடி நீளமுள்ள இந்த சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பல், காரணமாக இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் அரசியல் இழுபறி ஏற்பட்டுள்ளதாக வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இதேவேளை அண்மைய ஆண்டுகளில், வோஷிங்டனும் புது டெல்லியும் சீனாவை எதிர்க்கும் நோக்கில் இந்தியப் பெருங்கடலில் தங்கள் இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளன.

இதன் ஒரு கட்டமாக கடந்த வாரம், பழுதுபார்ப்பதற்காக அமெரிக்காவின் கடற்படை கப்பல் ஒன்றுக்கு சென்னை துறைமுகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுவே இந்திய துறைமுகம் ஒன்றில் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று பழுதுபார்ப்பதற்காக அனுமதிக்க முதல்தடவை என்றும் வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.

Latest news

விக்டோரியாவில் மூடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சாலைகள்

விக்டோரியா முழுவதும் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க காட்டுத்தீயால், மாநிலம் முழுவதும் ஏராளமான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விக்டோரியன் அவசர சேவைகள் துறை தெரிவித்துள்ளது. (மாநில மறுமொழி கட்டுப்பாட்டாளர், டேவிட் நுஜென்ட்)...

விக்டோரியன் பிரதமருக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட அலெக்ஸாண்ட்ரா நகரத்திற்கு விஜயம் செய்த விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன், உள்ளூர்வாசிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார். போராட்டக்காரர்களைத் தவிர்த்து, ஒரு கட்டிடத்தின் பின் கதவு...

8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் BTS இன் மெகா நிகழ்ச்சி

K-pop சூப்பர் குழுவான BTS, எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் 79 நிகழ்ச்சிகள் கொண்ட ஒரு பெரிய உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நிகழ்ச்சி...

புதிய சட்டங்கள் காரணமாக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள கார்களின் விலைகள்

புதிய கார் உமிழ்வு கொள்கை காரணமாக, பிரபலமான UTE, 4WD மற்றும் SUV வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. அல்பேனிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய...

புதிய சட்டங்கள் காரணமாக ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள கார்களின் விலைகள்

புதிய கார் உமிழ்வு கொள்கை காரணமாக, பிரபலமான UTE, 4WD மற்றும் SUV வாகனங்களின் விலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது. அல்பேனிய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய...

அடுத்த சில இரவுகளில் மெல்பேர்ண் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள்

அடுத்த சில இரவுகளில் மெல்பேர்ண் முழுவதும் "குறிப்பிடத்தக்க" போக்குவரத்து இடையூறுகள் ஏற்படும் என்று போக்குவரத்துத் துறை எச்சரிக்கிறது. இது 55 மீட்டர் நீளமும் 4.5 மீட்டர் அகலமும்...