Newsதாய்லாந்தில் அறையை விட்டு வெளி வர முடியாத பரிதாப நிலையில் கோட்டாபய

தாய்லாந்தில் அறையை விட்டு வெளி வர முடியாத பரிதாப நிலையில் கோட்டாபய

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மேலும் மூன்று பேருடன் சிங்கப்பூர் விமானம் மூலம் தாய்லாந்து வந்தடைந்தார்.

குறித்த விமானம் தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி அங்கு சென்றமை பற்றிய தகவல் வெளியானதையடுத்து விமானம் பெங்கொக்கில் உள்ள இராணுவ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஹோட்டலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருந்து பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.

Latest news

வணிக குற்றங்களை சமாளிக்க NSW அரசின் புதிய உத்தி

வணிக குற்றங்களை எதிர்த்துப் போராட நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு புதிய உத்தியை வெளியிட்டுள்ளது. "Operation Percentile" என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு நடவடிக்கை, NSW...

தெற்கு ஆஸ்திரேலிய மீனவர்களுக்கு புதிய மீன்பிடி கட்டுப்பாடுகள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளுக்கு பொழுதுபோக்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும். மேலும் Spencer வளைகுடா மற்றும்...

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 19 வயது ஓட்டுநர்

மேற்கு கிப்ஸ்லாந்தின் Buln Buln-ஐ சேர்ந்த 19 வயது ஓட்டுநர் ஒருவர் மீது வேகமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு McFlurry காரை ஓட்டிச்...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யும் விக்டோரிய சிறுவன்

விக்டோரியாவைச் சேர்ந்த Brock Mivett என்ற 10 வயது சிறுவன், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக தனது பொம்மை ரயில் சேகரிப்பின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். அவர்...

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 19 வயது ஓட்டுநர்

மேற்கு கிப்ஸ்லாந்தின் Buln Buln-ஐ சேர்ந்த 19 வயது ஓட்டுநர் ஒருவர் மீது வேகமாக வாகனம் ஓட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு McFlurry காரை ஓட்டிச்...

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்யும் விக்டோரிய சிறுவன்

விக்டோரியாவைச் சேர்ந்த Brock Mivett என்ற 10 வயது சிறுவன், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்காக நிதி திரட்டுவதற்காக தனது பொம்மை ரயில் சேகரிப்பின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். அவர்...