Newsதாய்லாந்தில் அறையை விட்டு வெளி வர முடியாத பரிதாப நிலையில் கோட்டாபய

தாய்லாந்தில் அறையை விட்டு வெளி வர முடியாத பரிதாப நிலையில் கோட்டாபய

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சிங்கப்பூரில் தங்கியிருந்த கோட்டாபய ராஜபக்ஷ மேலும் மூன்று பேருடன் சிங்கப்பூர் விமானம் மூலம் தாய்லாந்து வந்தடைந்தார்.

குறித்த விமானம் தாய்லாந்தின் ஃபூகெட் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி அங்கு சென்றமை பற்றிய தகவல் வெளியானதையடுத்து விமானம் பெங்கொக்கில் உள்ள இராணுவ விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஹோட்டலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருந்து பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.

Latest news

ராஜினாமா செய்த NSW போக்குவரத்து அமைச்சர்

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் பயணங்களுக்கு அரசாங்க ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு சம்பவத்தை...

உலகளவில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53...

கடுமையான வெப்பத்திற்குப் பிறகு விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு மழை பெய்யும் அறிகுறி

தெற்கு விக்டோரியாவில் குளிர்ச்சியான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று அதிகாலை முதல் குளிர் காலநிலை எல்லையைத் தாண்டி தெற்கு ஆஸ்திரேலியா மற்றும்...

போலியான குறுஞ்செய்தி, அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் பற்றி எச்சரிக்கை

அரசாங்க அதிகாரிகளிடமிருந்து வருவதாகக் கூறப்படும் போலி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு மையம் என்று கூறிக் கொண்டு, தனிநபர்களிடமிருந்து...

ராஜினாமா செய்த NSW போக்குவரத்து அமைச்சர்

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் பயணங்களுக்கு அரசாங்க ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு சம்பவத்தை...

உலகளவில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53...