Newsஇலங்கையில் சீனக் கப்பல் - தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா

இலங்கையில் சீனக் கப்பல் – தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா

-

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் சீன ஆய்வுக் கப்பல் நங்கூரமிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் இராமேஸ்வரம் கடலில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மண்டபம் பகுதியில் இந்திய கடலோர காவல் படைகள் முகாம்கள் அமைத்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நிய ஊடுருவலை கண்காணிப்பதற்காகவே சர்வதேச கடல் எல்லையில் ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்திய கடற்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்தக் கப்பல் தொடர்பில் இலங்கை எடுத்த தீர்மானத்தை, கடும் அழுத்தங்களைக் கொடுத்து சீனா மாற்றியுள்ளதாக ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் சீனா இலங்கைக்கு அதிக அழுத்தங்களை கொடுத்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

பாண்ட் நாயகனுக்கு $100,000 நன்கொடை அளித்த அமெரிக்க கோடீஸ்வரர்

Bondi பயங்கரவாத தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவரை நிராயுதபாணியாக்கிய துணிச்சலான கடைக்காரருக்காக GoFundMe நிதியில் கிட்டத்தட்ட $300,000 திரட்டப்பட்டுள்ளது. மிகப்பெரிய பங்களிப்பை அமெரிக்க ஹெட்ஜ்...

Bondi கடற்கரையில் வாகனத்தில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீசார் விளக்கம்

Bondi கடற்கரையில் நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, துப்பாக்கி உரிமைச் சட்டங்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்று நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிறிஸ் மின்ஸ்...

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....

மிகப்பெரிய AI செயல்பாட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் அரிய விண்கல் கண்டுபிடிப்பு

கர்டின் பல்கலைக்கழகத்தின் Desert Fireball Network-ஐ சேர்ந்த மாணவர்கள் குழு மேற்கு ஆஸ்திரேலியாவின் கோல்ட்ஃபீல்ட்ஸின் தொலைதூரப் பகுதியில் ஒரு விண்கல்லைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்கல் ஒரு முஷ்டி...

ஆஸ்திரேலியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை

ஆஸ்திரேலியாவில் கைதிகள், கைதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஐ.நா. தூதுக்குழு ஒன்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. 12 நாள் பயணத்தின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐ.நா....