Newsஇலங்கையில் சீனக் கப்பல் - தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா

இலங்கையில் சீனக் கப்பல் – தீவிரமாக கண்காணிக்கும் இந்தியா

-

ஹம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் சீன ஆய்வுக் கப்பல் நங்கூரமிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் இராமேஸ்வரம் கடலில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் இராமேஸ்வரம், தனுஷ்கோடி கடல் பகுதியில் தாழ்வாக பறந்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

மண்டபம் பகுதியில் இந்திய கடலோர காவல் படைகள் முகாம்கள் அமைத்து இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நிய ஊடுருவலை கண்காணிப்பதற்காகவே சர்வதேச கடல் எல்லையில் ஹெலிகாப்டர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு உயர் அதிகாரி குறிப்பிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, சீன தொழில்நுட்ப ஆய்வுக் கப்பல் ஒன்று இலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்திய கடற்படை கண்காணிப்பை அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்தக் கப்பல் தொடர்பில் இலங்கை எடுத்த தீர்மானத்தை, கடும் அழுத்தங்களைக் கொடுத்து சீனா மாற்றியுள்ளதாக ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் சீனா இலங்கைக்கு அதிக அழுத்தங்களை கொடுத்ததாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

நெருக்கடியில் உள்ள இளம் ஆஸ்திரேலியர்கள் வாய்வழி சுகாதாரம்

ஆஸ்திரேலியாவில் இளைஞர்கள் வாய்வழி சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், மேலும் மருத்துவ சேவைகளில் பல் பராமரிப்பு இல்லாதது ஒரு முக்கிய காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மெல்பேர்ண் பல்கலைக்கழகத்தின்...

ஆஸ்திரேலியாவின் வயதான சிம்பன்சி உயிரிழந்தது

ஆஸ்திரேலியா பிராந்தியத்தில் வாழும் மிக வயதான சிம்பன்சியான காசியஸ், கடந்த வியாழக்கிழமை தனது 53 வயதில் இறந்தது. அது ராக்ஹாம்ப்டன் மிருகக்காட்சிசாலையில் நடந்தது. அவரது உடல்நிலை மோசமடைந்த...

Woolworths-இல் விற்கப்படும் காகிதப் பைகள் தரமற்றவை என குற்றச்சாட்டு

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடி வாங்குபவர்கள் பெரும்பாலும் check outs-களில் விற்கப்படும் 25c காகிதப் பைகள் உடைந்து விடுமோ என்று கவலைப்படுகிறார்கள். இதற்கிடையில், NSW, VIC மற்றும் QLD...

நீரிழிவு மருந்துகள் பற்றிய புதிய கண்டுபிடிப்பு

நீரிழிவு நோய்க்கு பொதுவாக பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்து மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டு வகையான நீரிழிவு மருந்துகளுக்கு 6...

குயின்ஸ்லாந்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழப்பு

குயின்ஸ்லாந்தில் மின்னல் தாக்கியதில் இரண்டு பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. Sunshine Coast-இல் ஒரு பெண்ணும், Burpengary-இல் மற்றொரு பெண்ணும்...

NSW-வில் போதையில் தன் தாயைக் கொன்ற இளைஞன்

தனது தாயை பூந்தொட்டியால் அடித்து கொலை செய்ததாக இளைஞர் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் கொலையை ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் அது ஒரு கொலை அல்ல...