Newsநியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவள்ள தடை

நியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவள்ள தடை

-

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை ஆக அதிகம் உள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் பாடசாலைகளில் கைப்பேசிகளைத் தடை செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள தொடக்க பாடசாலைகளில் பயிலும் ஏறத்தாழ 12 வயது மாணவர்கள் பாடசாலைகளில் இருக்கும்போது கைப்பேசிகளைப் பயன்படுத்த முடியாது எனச் சில பாடசாலைகள் அறிவித்தன.

கைப்பேசி பயன்பாட்டைச் சில பாடசாலைகள் கட்டுப்படுத்தின. இந்த அணுகுமுறை பலன்
தந்திருப்பதாக அப் பாடசாலைகள் தெரிவித்தன.

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதாகவும் தேர்வு முடிவுகள் மேம்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பு வலுவடைந்திருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் கல்வி அதிகாரிகள் கூறினர்.

இதனால் இந்த அணுகுமுறையை அனைத்து மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர்.

சிட்னியில் உள்ள டேவிட்சன் உயர்நிலைப்பள்ளி 12 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவர்களுக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் கைப்பேசிக்கு தடை விதித்தது.

அதன்படி, மாணவர்கள் தங்கள் கைப்பேசிகளைப் பாடசாலைகளுக்கு கொண்டு செல்லலாம். ஆனால் அவற்றை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டிகளில் பூட்டி வைத்திவிட வேண்டும்.

கைப்பேசித் தடை காரணமாக மாணவர்களிடையிலான தொடர்பு, பேச்சு அதிகரித்திருப்பதாக பாடசாலைகளின் தலைமையாசிரியர் டேவிட் ரூல் மகிழ்ச்சி தெரிவித்தார்.

“கவனச் சிதறலைக் குறைக்கும் அணுகுமுறைகள் பாடசாலைகளின் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பலனைத் தருகின்றன. கைப்பேசி இல்லாததால் பிறருடன் பேசும் பழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்கள் பலர் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று ரூல் கூறினார். பாடசாலைகளில் கைப்பேசித் தடைக்குப் பெற் றோரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Latest news

பிரிட்டிஷ்-ஆஸ்திரேலிய இரட்டைக் குடியுரிமைகளுக்கான புதிய சட்டம்

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரட்டை பிரிட்டிஷ் அல்லது ஐரிஷ் குடியுரிமை உள்ளவர்களுக்கான புதிய பயண விதிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பெப்ரவரி 25 ஆம் திகதி முதல் அமலுக்கு...

மர்மமான சூழலில் சடலமாக கிடந்த பிரபல பாடகி

ஆஸ்திரேலியாவில் பிரபலமான பாடகி ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Velvet Pesu என்பவர் ஆஸ்திரேலியாவில் பிரபலமான Folk பாடகி-பாடலாசிரியர், இசைக்கலைஞர் மற்றும் காட்சி...

75 நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் குடியேறத் தடை

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கான குடியேற்ற விசா நிறுத்தப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு ஜனவரி 21ஆம் திகதி முதல்...

ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக விக்டோரியா மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் ரத்து

விக்டோரியாவில் உள்ள பொது மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது சுகாதார ஊழியர்கள் தங்கள் சம்பளப் பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய...

பிரபலமான விக்டோரியன் Resort-ஐ தாக்கிய திடீர் வெள்ளம்

விக்டோரியாவில் வை நதி, கென்னட் நதி, Cumberland நதி மற்றும் Lorne-ஐ சுற்றியுள்ள பகுதிகளை திடீர் வெள்ளம் நெருங்கி வருவதால், மக்கள் உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு...

சிட்னி விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள்

சிட்னி Kingsford Smith விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறையால் நேற்று ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாகியுள்ளன. பல ஊழியர்கள் நோய்வாய்ப்பட்ட மற்றும்...