Newsநியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவள்ள தடை

நியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவள்ள தடை

-

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை ஆக அதிகம் உள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் பாடசாலைகளில் கைப்பேசிகளைத் தடை செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள தொடக்க பாடசாலைகளில் பயிலும் ஏறத்தாழ 12 வயது மாணவர்கள் பாடசாலைகளில் இருக்கும்போது கைப்பேசிகளைப் பயன்படுத்த முடியாது எனச் சில பாடசாலைகள் அறிவித்தன.

கைப்பேசி பயன்பாட்டைச் சில பாடசாலைகள் கட்டுப்படுத்தின. இந்த அணுகுமுறை பலன்
தந்திருப்பதாக அப் பாடசாலைகள் தெரிவித்தன.

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதாகவும் தேர்வு முடிவுகள் மேம்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பு வலுவடைந்திருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் கல்வி அதிகாரிகள் கூறினர்.

இதனால் இந்த அணுகுமுறையை அனைத்து மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர்.

சிட்னியில் உள்ள டேவிட்சன் உயர்நிலைப்பள்ளி 12 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவர்களுக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் கைப்பேசிக்கு தடை விதித்தது.

அதன்படி, மாணவர்கள் தங்கள் கைப்பேசிகளைப் பாடசாலைகளுக்கு கொண்டு செல்லலாம். ஆனால் அவற்றை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டிகளில் பூட்டி வைத்திவிட வேண்டும்.

கைப்பேசித் தடை காரணமாக மாணவர்களிடையிலான தொடர்பு, பேச்சு அதிகரித்திருப்பதாக பாடசாலைகளின் தலைமையாசிரியர் டேவிட் ரூல் மகிழ்ச்சி தெரிவித்தார்.

“கவனச் சிதறலைக் குறைக்கும் அணுகுமுறைகள் பாடசாலைகளின் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பலனைத் தருகின்றன. கைப்பேசி இல்லாததால் பிறருடன் பேசும் பழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்கள் பலர் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று ரூல் கூறினார். பாடசாலைகளில் கைப்பேசித் தடைக்குப் பெற் றோரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...