Newsநியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவள்ள தடை

நியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவள்ள தடை

-

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை ஆக அதிகம் உள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் பாடசாலைகளில் கைப்பேசிகளைத் தடை செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள தொடக்க பாடசாலைகளில் பயிலும் ஏறத்தாழ 12 வயது மாணவர்கள் பாடசாலைகளில் இருக்கும்போது கைப்பேசிகளைப் பயன்படுத்த முடியாது எனச் சில பாடசாலைகள் அறிவித்தன.

கைப்பேசி பயன்பாட்டைச் சில பாடசாலைகள் கட்டுப்படுத்தின. இந்த அணுகுமுறை பலன்
தந்திருப்பதாக அப் பாடசாலைகள் தெரிவித்தன.

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதாகவும் தேர்வு முடிவுகள் மேம்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பு வலுவடைந்திருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் கல்வி அதிகாரிகள் கூறினர்.

இதனால் இந்த அணுகுமுறையை அனைத்து மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர்.

சிட்னியில் உள்ள டேவிட்சன் உயர்நிலைப்பள்ளி 12 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவர்களுக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் கைப்பேசிக்கு தடை விதித்தது.

அதன்படி, மாணவர்கள் தங்கள் கைப்பேசிகளைப் பாடசாலைகளுக்கு கொண்டு செல்லலாம். ஆனால் அவற்றை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டிகளில் பூட்டி வைத்திவிட வேண்டும்.

கைப்பேசித் தடை காரணமாக மாணவர்களிடையிலான தொடர்பு, பேச்சு அதிகரித்திருப்பதாக பாடசாலைகளின் தலைமையாசிரியர் டேவிட் ரூல் மகிழ்ச்சி தெரிவித்தார்.

“கவனச் சிதறலைக் குறைக்கும் அணுகுமுறைகள் பாடசாலைகளின் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பலனைத் தருகின்றன. கைப்பேசி இல்லாததால் பிறருடன் பேசும் பழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்கள் பலர் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று ரூல் கூறினார். பாடசாலைகளில் கைப்பேசித் தடைக்குப் பெற் றோரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Latest news

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் வீட்டு வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்

ஈஸ்டர் விடுமுறை காலத்தில் வீட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்துகிறது. விக்டோரியாவில் மட்டும்,...

ஆஸ்திரேலியாவில் அஞ்சல் வாக்களிப்பு பற்றி விழிப்புணர்வு

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், கூட்டாட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி மாலை 6 மணியுடன் முடிவடையும் என்று கூறுகிறது. மே 3...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பாம்பு கடி

உங்கள் வீட்டிற்குள் வரும் பாம்புகளைத் தொடவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்று ஆஸ்திரேலிய வனவிலங்கு மீட்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால், அனைத்து...

பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பாலின ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய நியாயமான பணி ஆணையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட தொழில்களில் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு...

பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பாலின ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய நியாயமான பணி ஆணையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட தொழில்களில் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு...

2.7 மில்லியன் ஆஸ்திரேலியர்களைப் பாதித்துள்ள ஒரு நோய்

ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகத்தின் சமீபத்திய அறிக்கை, ஆஸ்திரேலியாவில் ஒரு தொற்றுநோய் போல பரவி வரும் ஒரு நோயை வெளிப்படுத்தியுள்ளது. நாள்பட்ட சிறுநீரக நோய் குறியீட்டின்படி, 2.69 மில்லியன்...