Newsநியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவள்ள தடை

நியூ சவுத் வேல்ஸ் பாடசாலைகளில் அமுலுக்கு வரவள்ள தடை

-

ஆஸ்திரேலியாவில் மக்கள்தொகை ஆக அதிகம் உள்ள மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் பாடசாலைகளில் கைப்பேசிகளைத் தடை செய்ய கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தில் உள்ள தொடக்க பாடசாலைகளில் பயிலும் ஏறத்தாழ 12 வயது மாணவர்கள் பாடசாலைகளில் இருக்கும்போது கைப்பேசிகளைப் பயன்படுத்த முடியாது எனச் சில பாடசாலைகள் அறிவித்தன.

கைப்பேசி பயன்பாட்டைச் சில பாடசாலைகள் கட்டுப்படுத்தின. இந்த அணுகுமுறை பலன்
தந்திருப்பதாக அப் பாடசாலைகள் தெரிவித்தன.

மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதாகவும் தேர்வு முடிவுகள் மேம்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான தொடர்பு வலுவடைந்திருப்பதாக நியூ சவுத் வேல்ஸ் கல்வி அதிகாரிகள் கூறினர்.

இதனால் இந்த அணுகுமுறையை அனைத்து மாணவர்களுக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர்.

சிட்னியில் உள்ள டேவிட்சன் உயர்நிலைப்பள்ளி 12 வயதிலிருந்து 16 வயது வரையிலான மாணவர்களுக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் கைப்பேசிக்கு தடை விதித்தது.

அதன்படி, மாணவர்கள் தங்கள் கைப்பேசிகளைப் பாடசாலைகளுக்கு கொண்டு செல்லலாம். ஆனால் அவற்றை தங்களுக்கென ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பெட்டிகளில் பூட்டி வைத்திவிட வேண்டும்.

கைப்பேசித் தடை காரணமாக மாணவர்களிடையிலான தொடர்பு, பேச்சு அதிகரித்திருப்பதாக பாடசாலைகளின் தலைமையாசிரியர் டேவிட் ரூல் மகிழ்ச்சி தெரிவித்தார்.

“கவனச் சிதறலைக் குறைக்கும் அணுகுமுறைகள் பாடசாலைகளின் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பலனைத் தருகின்றன. கைப்பேசி இல்லாததால் பிறருடன் பேசும் பழக்கம் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்கள் பலர் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று ரூல் கூறினார். பாடசாலைகளில் கைப்பேசித் தடைக்குப் பெற் றோரிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Latest news

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...

விபத்துக்குள்ளான குயின்ஸ்லாந்து பயணக் கப்பல்

குயின்ஸ்லாந்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு பயணக் கப்பல் பப்புவா நியூ கினியாவின் கடற்பரப்பில் ஒரு பாறையில் மோதியதை அடுத்து, 12 நாள் சொகுசு பயணப் பயணம்...

விபத்துக்குள்ளான குயின்ஸ்லாந்து பயணக் கப்பல்

குயின்ஸ்லாந்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு பயணக் கப்பல் பப்புவா நியூ கினியாவின் கடற்பரப்பில் ஒரு பாறையில் மோதியதை அடுத்து, 12 நாள் சொகுசு பயணப் பயணம்...

ஆஸ்திரேலியாவின் இறைச்சித் தொழிலுக்கு சிவப்பு விளக்கு

சீனா மாட்டிறைச்சி இறக்குமதிக்கு புதிய ஒதுக்கீடுகள் மற்றும் வரிகளை விதித்து வருவதால், ஆஸ்திரேலிய இறைச்சித் தொழில் $1 பில்லியனுக்கும் அதிகமான வர்த்தகத்தை இழக்க நேரிடும் என்ற...