Newsபணியாற்ற முடியவில்லை என்றால் வீட்டுக்கு செல்லுங்கள் - ஜனாதிபதி ரணில் காட்டம்

பணியாற்ற முடியவில்லை என்றால் வீட்டுக்கு செல்லுங்கள் – ஜனாதிபதி ரணில் காட்டம்

-

கீழ்மட்ட அரச உத்தியோகத்தர்கள் தமது கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை அபிவிருத்தி செய்து மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எவருக்கும் இலவசமாக உணவு வழங்க அரசாங்கம் தயாரில்லை எனவும், வேலை செய்ய முடியாத அனைவரையும் வெளியேறுமாறு தாம் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் வலியுறுத்தியுள்ளார்.

அனுராதபுரம் மாவட்ட அபிவிருத்தி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கட்சி நிற, ஜாதி, மத பேதமின்றி நாட்டிற்காக அனைவரையும் ஒன்றிணைக்கும் கடந்த கால பாடத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி கற்பித்தது. நாட்டுக்காக அனைவரையும் ஒன்றிணைப்பதே தமது நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கான தீர்மானங்களை அனைவரும் தாமதமின்றி எடுக்க வேண்டும். நாட்டுக்கு புதிய அரசியல் கோட்பாடு மற்றும் கலாசார அரசியல் பயணம் தேவை. பழைய அரசியல் அமைப்பு தற்போது மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் குழுவொன்று நியமிக்கப்படும். அந்த விடயங்களில் வெளிநாட்டு ஆலோசனை சேவைகளையும் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் சத்தம் இல்லாமல் யுத்தம் செய்த ஒரு அரசியல் போராளி மறைவு!

தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆஸ்திரேலியாவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் பணியாற்றி, தமிழர் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தினை அரசு மற்றும் ஆங்கிலேயே உறவுகளுக்கு...

ஆப்கானிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் – ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கம் பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சமீபத்திய விரைவான அதிகரிப்பைக்...

போராட்டங்களை கட்டுப்படுத்தும் விக்டோரியா அரசு – முகமூடிகள், சின்னங்கள், கொடிகள் தடை!

போராட்டங்களின் போது வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த விக்டோரியன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, குற்றம் செய்தவர்களிடமிருந்தோ அல்லது போராட்டத்தின் போது குற்றம்...

விக்டோரியாவில் மாறி வரும் சட்டங்கள் – குழந்தைகளுக்கும் கடுமையான தண்டனைகள்

விக்டோரியா மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன், "Adult time for violent crime" என்ற புதிய சட்டங்களை அறிவித்துள்ளார். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கூட கடுமையான தண்டனைகள்...

24 மணி நேர McDonald’s-ஐ எதிர்க்கும் மெல்பேர்ண் கவுன்சில்

மெல்பேர்ண், நார்த்கோட்டில் உள்ள High Street-இல் 24 மணி நேரமும் இயங்கும் புதிய McDonald’s உணவகத்திற்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டமிடல் விண்ணப்பத்திற்கு எதிராக...

மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ள டாஸ்மேனிய அரசாங்கம்

குடும்ப உறுப்பினர்களின் அறிவு அல்லது ஒப்புதல் இல்லாமல் பிரேத பரிசோதனைகளுக்குப் பிறகு உடல் பாகங்களை தக்கவைத்துக் கொள்ளும் கடந்த கால நடைமுறைக்கு மன்னிப்பு கோருவதாக டாஸ்மேனிய...