Newsஇலங்கையில் மண்ணெண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு - மக்கள் கடும் எதிர்ப்பு

இலங்கையில் மண்ணெண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு – மக்கள் கடும் எதிர்ப்பு

-

மண்ணெண்ணெய் விலையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், அதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்யின் விலை 87 ரூபாவாக இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 253 ரூபாவால் விலை அதிகரிப்பு இடம்பெற்றது.

இதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலையாக 340 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை அதிகரிப்புக்கு மீனவர்கள் உட்பட பல தரப்பினரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

சமையல் எரிவாயுவின் விலை 5 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது, எனவே, மண்ணெண்ணெய் அடுப்புதான் பயன்படுத்தி வந்தோம், தற்போது அதன் விலையும் உச்சம் தொட்டுள்ளது. மின்சார கட்டணமும் அதிகரித்துள்ளதால், என்ன செய்வதென்று தெரியவில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மண்ணெண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்படும் என வியாபார தரப்பு தெரிவிக்கின்றது.

Latest news

உலகின் வெப்பமான இடமாக மாறும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா முழுவதும் நிலவும் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலையால் முழு கண்டமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள Marble Barஉலகின் மிக வெப்பமான இடமாக...

விக்டோரியாவிற்கு பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள்

விக்டோரியாவின் பல மாவட்டங்களுக்கு நாளை பேரழிவு தரும் தீ எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. Longwood பகுதியில் காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதாகவும், பல வீடுகள் மற்றும் சொத்துக்கள்...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

அமெரிக்கா செல்லும் Bondi ஹீரோ

Bondi நாயகன் அகமது அல் அகமது மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு பறந்து சென்றுள்ளார். டிசம்பர் 14 பயங்கரவாத தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட 43 வயதான அவர், தனது...

வட்டி விகிதக் குறைப்பு குறித்த நம்பிக்கைகள் பொய்த்துப் போயின!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு விரைவில் வட்டி நிவாரணம் கிடைக்காது என்று ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆண்ட்ரூ ஹவுசர் இன்று தெரிவித்தார். இந்த நாட்களில் பணவீக்கம்...

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல்

மெல்பேர்ணில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஈடுபட்ட ஒரு குழுவைக் கண்டுபிடிக்க காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடுகிறது. இரு குழுக்களுக்கிடையே ஆன்லைன் உரையாடல் அதிகரித்ததன் விளைவாக...