Newsஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி - நெகிழ வைத்த...

ஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி – நெகிழ வைத்த பொலிஸார்

-

ஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

என் வாழ்க்கையில் பொலிஸ் நிலையத்தின் வாசலை மிதித்ததே இல்லை,’ என்பது பலருக்குப் பெருமிதம் கொள்வதற்கான ஓர் அம்சமாக இதுவாகும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 100 வயது ஜீன் பிக்டன் (Jean Bicketon) என்ற மூதாட்டிக்கு என்றாவது ஒரு நாள் கைதுசெய்யப்பட வேண்டும் என்ற ஆசை!

அவரது பிறந்தநாளில் ஆசையை நிறைவேற்ற உதவியது விக்டோரியா மாநிலத்தின் பொலிஸார்.

அது குறித்து Facebook-இல் பதிவுசெய்யப்பட்டது. முதியோர் இல்லத்தில் பிக்டன் தமது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று அபாய ஒலி கேட்டது.

சிவப்பு ஒளி வீசிக் கொண்டிருந்த பொலிஸார் காரிலிருந்து அதிகாரிகள் மூவர் இறங்கினர். ‘உங்களைக் கைதுசெய்கிறோம்,’ என்று கூறி அவர்கள் பிக்டனின் கைகளில் விலங்கை மாட்டினர்.

அதற்குச் சற்றும் எதிர்ப்புத் தெரிவிக்காத அவர் மகிழ்ச்சியுடன் கைதானார். பிக்டனின் ஆசையும் நிறைவேறியது. இந்த ஆசையையும் நிறைவேற்ற பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...