Newsஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி - நெகிழ வைத்த...

ஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி – நெகிழ வைத்த பொலிஸார்

-

ஆஸதிரேலியாவில் 100வது பிறந்தநாளில் கைது செய்யப்பட்ட பெண்மணி ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

என் வாழ்க்கையில் பொலிஸ் நிலையத்தின் வாசலை மிதித்ததே இல்லை,’ என்பது பலருக்குப் பெருமிதம் கொள்வதற்கான ஓர் அம்சமாக இதுவாகும்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 100 வயது ஜீன் பிக்டன் (Jean Bicketon) என்ற மூதாட்டிக்கு என்றாவது ஒரு நாள் கைதுசெய்யப்பட வேண்டும் என்ற ஆசை!

அவரது பிறந்தநாளில் ஆசையை நிறைவேற்ற உதவியது விக்டோரியா மாநிலத்தின் பொலிஸார்.

அது குறித்து Facebook-இல் பதிவுசெய்யப்பட்டது. முதியோர் இல்லத்தில் பிக்டன் தமது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது, திடீரென்று அபாய ஒலி கேட்டது.

சிவப்பு ஒளி வீசிக் கொண்டிருந்த பொலிஸார் காரிலிருந்து அதிகாரிகள் மூவர் இறங்கினர். ‘உங்களைக் கைதுசெய்கிறோம்,’ என்று கூறி அவர்கள் பிக்டனின் கைகளில் விலங்கை மாட்டினர்.

அதற்குச் சற்றும் எதிர்ப்புத் தெரிவிக்காத அவர் மகிழ்ச்சியுடன் கைதானார். பிக்டனின் ஆசையும் நிறைவேறியது. இந்த ஆசையையும் நிறைவேற்ற பொலிஸார் மேற்கொண்ட முயற்சி பலரையும் நெகிழ வைத்துள்ளது.

Latest news

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் புகை மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதம்

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் இன்று காலை அவசர தீ எச்சரிக்கை ஒலித்ததால் விமானப் பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று காலை 8...

கொசுக்களால் பரவும் மூளை வைரஸ் பற்றி எச்சரிக்கை

தெற்கு NSW இல் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் (JE) குழுவைச் சேர்ந்த ஒரு அரிய, தீவிர மூளை வைரஸ் பரவும் அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொசுக்களால் பரவும் இந்த...