Newsஅணுவாலையில் மிக ஆபத்தான கதிர்வீச்சு விபத்திலிருந்து தப்பிய உலகம்

அணுவாலையில் மிக ஆபத்தான கதிர்வீச்சு விபத்திலிருந்து தப்பிய உலகம்

-

உக்ரேனில் உள்ள ஸப்போரிஸியா (Zaporizhzhia) அணுவாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. அங்குச் செயல்பட்ட மின்சாரக் கம்பிவடங்களில் கோளாறு ஏற்பட்டிருந்ததால் மின்சாரத் தடை உண்டாயிற்று.

ஐரோப்பாவின் ஆகப்பெரிய அணுவாலையான அதில் கதிர்வீச்சு வெளியாகும் ஆபத்தை உலகம் தவிர்த்துள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.

அணுவாலை தற்போது மின்கம்பி வடங்களுக்குப் பதிலாக டீசலில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ரஷ்யா அந்த அணுவாலையைக் கைப்பற்றியிருப்பதாக உக்ரேன் குற்றஞ்சாட்டுகிறது.

அங்கு ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆலையைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் உக்ரேன் கூறுகிறது. அதற்கு நேர்மாறாக, உக்ரேன்தான் அந்தப் பகுதியிலிருந்து பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் நடத்துவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஸப்பொரிஸியா அணுவாலையிலிருந்து ரஷ்யத் துருப்புகளை அகற்ற, அனைத்துலக அணுசக்தி ஆணையத்தின் உதவியை நாடியுள்ளது உக்ரேன்.

Latest news

உலகின் முதல் டிரில்லியனராக மாற எலான் மஸ்க்கிற்கு வாய்ப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கை உலகின் முதல் டிரில்லியனராக மாற்றக்கூடிய ஒரு சம்பளத் தொகுப்பை டெஸ்லா பங்குதாரர்கள் அங்கீகரித்துள்ளனர். நிறுவனத்தின் வருடாந்திர பங்குதாரர் கூட்டத்தில்...

மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் மேகன்

பிரிட்டிஷ் அரச குடும்பத்தைச் சேர்ந்த மேகன் மார்க்கல், மீண்டும் நடிப்புக்குத் திரும்பியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இளவரசர் ஹாரியை மணந்த பிறகு நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற மேகன்,...

ரசாயனங்கள் மீது Sunscreens உற்பத்தியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலிய மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையம், Sunscreenகளில் உள்ள ரசாயனங்கள் மீது புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. Sunscreen-இல் உள்ள பல வேதிப்பொருட்களை...

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறை

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இயற்கை பவளப்பாறையான Great Barrier Reef-இன் எதிர்காலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. புவி வெப்பமடைதலை 2°C க்கும் குறைவாக வைத்திருந்தால், Great...

ஆஸ்திரேலிய குடியுரிமையை துறந்து இந்தியனாக மாறிய வீரர்

ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் தமது சொந்த நாட்டின் குடியுரிமையை துறந்து, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரியான் வில்லியம்ஸ் என்ற கால்பந்து வீரர்...

வட கொரிய சைபர் குற்றவாளிகள் மீது ஆஸ்திரேலியா எடுக்கும் நடவடிக்கை

வட கொரியாவின் அழிவுகரமான ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் சைபர் குற்றவாளிகள் மீது நிதித் தடைகள் மற்றும் பயணத் தடைகளை விதிக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. வடகொரியாவின்...