Newsஅணுவாலையில் மிக ஆபத்தான கதிர்வீச்சு விபத்திலிருந்து தப்பிய உலகம்

அணுவாலையில் மிக ஆபத்தான கதிர்வீச்சு விபத்திலிருந்து தப்பிய உலகம்

-

உக்ரேனில் உள்ள ஸப்போரிஸியா (Zaporizhzhia) அணுவாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. அங்குச் செயல்பட்ட மின்சாரக் கம்பிவடங்களில் கோளாறு ஏற்பட்டிருந்ததால் மின்சாரத் தடை உண்டாயிற்று.

ஐரோப்பாவின் ஆகப்பெரிய அணுவாலையான அதில் கதிர்வீச்சு வெளியாகும் ஆபத்தை உலகம் தவிர்த்துள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.

அணுவாலை தற்போது மின்கம்பி வடங்களுக்குப் பதிலாக டீசலில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ரஷ்யா அந்த அணுவாலையைக் கைப்பற்றியிருப்பதாக உக்ரேன் குற்றஞ்சாட்டுகிறது.

அங்கு ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆலையைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் உக்ரேன் கூறுகிறது. அதற்கு நேர்மாறாக, உக்ரேன்தான் அந்தப் பகுதியிலிருந்து பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் நடத்துவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஸப்பொரிஸியா அணுவாலையிலிருந்து ரஷ்யத் துருப்புகளை அகற்ற, அனைத்துலக அணுசக்தி ஆணையத்தின் உதவியை நாடியுள்ளது உக்ரேன்.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...