Newsஅணுவாலையில் மிக ஆபத்தான கதிர்வீச்சு விபத்திலிருந்து தப்பிய உலகம்

அணுவாலையில் மிக ஆபத்தான கதிர்வீச்சு விபத்திலிருந்து தப்பிய உலகம்

-

உக்ரேனில் உள்ள ஸப்போரிஸியா (Zaporizhzhia) அணுவாலை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. அங்குச் செயல்பட்ட மின்சாரக் கம்பிவடங்களில் கோளாறு ஏற்பட்டிருந்ததால் மின்சாரத் தடை உண்டாயிற்று.

ஐரோப்பாவின் ஆகப்பெரிய அணுவாலையான அதில் கதிர்வீச்சு வெளியாகும் ஆபத்தை உலகம் தவிர்த்துள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறினார்.

அணுவாலை தற்போது மின்கம்பி வடங்களுக்குப் பதிலாக டீசலில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ரஷ்யா அந்த அணுவாலையைக் கைப்பற்றியிருப்பதாக உக்ரேன் குற்றஞ்சாட்டுகிறது.

அங்கு ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருப்பதாகவும் ஆலையைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் உக்ரேன் கூறுகிறது. அதற்கு நேர்மாறாக, உக்ரேன்தான் அந்தப் பகுதியிலிருந்து பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்கள் நடத்துவதாக ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஸப்பொரிஸியா அணுவாலையிலிருந்து ரஷ்யத் துருப்புகளை அகற்ற, அனைத்துலக அணுசக்தி ஆணையத்தின் உதவியை நாடியுள்ளது உக்ரேன்.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...