Newsசாலமன் தீவுகளில் அமெரிக்கக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு

சாலமன் தீவுகளில் அமெரிக்கக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு

-

அமெரிக்கக் கடலோரக் காவல்படைக் கப்பலுக்குத் தென் பசிபிக் நாடான சாலமன் (Solomon) தீவுகளில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கப்பல் தனது துறைமுகத்தில் நிற்பதற்கு சாலமன் தீவுகள் மறுத்துள்ளது. தென் பசிபிக் நாடுகளிடையே சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவது குறித்த கவலை அதிகரிக்கும் வேளையில் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஒலிவியர் ஹென்ரி (Oliver Henry) என்ற அந்த அமெரிக்கக் கப்பல் எண்ணெயையும் உணவுப் பொருள்களையும் நிரப்புவதற்கு அனுமதி கேட்டபோது சாலமன் தீவுகள் மறுத்துவிட்டது.

Stars and Stripes ராணுவ ஏடு அந்தத் தகவலை வெளியிட்டது. சாலமன் தீவுகள் அரசாங்கம் அந்தச் செய்தி குறித்து கருத்து சொல்லவில்லை. அண்மையில் சீனாவும் சாலமன் தீவுகள் அரசாங்கமும் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. சாலமன் தீவுகள் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட தென்பசிபிக் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...