Newsசாலமன் தீவுகளில் அமெரிக்கக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு

சாலமன் தீவுகளில் அமெரிக்கக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு

-

அமெரிக்கக் கடலோரக் காவல்படைக் கப்பலுக்குத் தென் பசிபிக் நாடான சாலமன் (Solomon) தீவுகளில் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கப்பல் தனது துறைமுகத்தில் நிற்பதற்கு சாலமன் தீவுகள் மறுத்துள்ளது. தென் பசிபிக் நாடுகளிடையே சீனாவின் ஆதிக்கம் வளர்ந்து வருவது குறித்த கவலை அதிகரிக்கும் வேளையில் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ஒலிவியர் ஹென்ரி (Oliver Henry) என்ற அந்த அமெரிக்கக் கப்பல் எண்ணெயையும் உணவுப் பொருள்களையும் நிரப்புவதற்கு அனுமதி கேட்டபோது சாலமன் தீவுகள் மறுத்துவிட்டது.

Stars and Stripes ராணுவ ஏடு அந்தத் தகவலை வெளியிட்டது. சாலமன் தீவுகள் அரசாங்கம் அந்தச் செய்தி குறித்து கருத்து சொல்லவில்லை. அண்மையில் சீனாவும் சாலமன் தீவுகள் அரசாங்கமும் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டன. சாலமன் தீவுகள் நூற்றுக்கணக்கான தீவுகளைக் கொண்ட தென்பசிபிக் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...