Newsவெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களுக்கு முக்கிய எச்சரிக்கை

-

சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டு பண பரிமாற்றத்தில் ஈடுபடுகின்ற நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமிப்பதற்கு பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் தீவிரமடைந்துள்ளமைக்கான பிரதான காரணம் டொலர் தட்டுப்பாடாகும் என்று மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணிகள் தொடர்பிலும் மத்திய வங்கி வெளிப்படுத்தியுள்ளது.

அதற்கமைய சட்ட ரீதியான வங்கி முறைமைகளுக்கு அப்பால் உண்டியல் மற்றும் ஹவாலா முறைமை ஊடாக பணப்பறிமாற்றம் இடம்பெறுகின்றமை மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை பணியாளர்களினால் வெவ்வேறு அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வங்கி முறைமையின் ஊடாக அன்றி சட்டத்திற்கு முரணான முறைமைகளைக் கையாளுதல் என்பன பிரதான காரணிகளாக மத்திய வங்கியினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய வங்கி ஆளுனரின் கோரிக்கைக்கு அமைய மேற்கூறப்பட்ட காரணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொலிஸ்மா அதிபரினால் சட்ட விரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைப்பிரிவில் பிரத்தியேக குழுவொன்றை நியமித்து , குறித்த விசாரணை நடவடிக்கைகளை மேலும் பரந்தளவில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவை தவிர , சட்டத்திற்கு முரணான டொலர் பரிமாற்றத்தினை தடுப்பதற்காக 2006 இல 5 நாணய சுத்தீகரிப்பு சட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் உறுப்புரைகளில் டொலரைப் பெற்றுக் கொண்ட முறைமையை அறிந்து கொள்வதற்கான விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...