Newsபுலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஆஸ்திரேலியா

புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஆஸ்திரேலியா

-

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், தொழிலாளர்கள் பற்றாக்குறையை தவிர்க்க, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

இதற்காக 20 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு வேலை தேட உதவுவதற்காக மேலும்14 மில்லியன் டொலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கத்தின் பத்தாண்டு பணியாளர் திட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி கன்பராவில் தொடங்கும் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மாநாட்டில் தனது திட்டத்தை முன்வைக்க மாநில முதல்வர் தயாராகி வருகிறார்.

மாநில அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2025 வரையிலான காலகட்டத்தில் குயின்ஸ்லாந்தின் வேலைகள் சுமார் 280,000 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குயின்ஸ்லாந்து பொருளாதாரத்தில் தொழிலாளர்களை விட தற்போது அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதாக மாநில பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மற்றொரு திட்டம் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சர்வதேச மாணவர்கள் வேலை தேடுவதற்கு $5.6 மில்லியன் ஒதுக்கும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...