Newsவரவு செலவுத் திட்டம் ரணில் முன்வைத்த முக்கிய விடயங்கள்

வரவு செலவுத் திட்டம் ரணில் முன்வைத்த முக்கிய விடயங்கள்

-

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

வரி அதிகரிப்பை மேற்கொண்டு அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வற் வரியை 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி அறிவித்த முக்கிய விடயங்கள்

*வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

*வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்

*சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க யோசனை.

*அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும்.
தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும்

*வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

*வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்.

*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும். தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும். என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Latest news

ஜப்பான் நிலநடுக்கம் – 33 பேர் படுகாயம்

வடக்கு ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 7.5...

ஆஸ்திரேலியாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறிய பெண் கடும் குளிரால் மரணம்

ஆஸ்திரேலியாவில் மலையேறிய பெண் கடும் குளிரால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் மிக உயரமான Grossglockner சிகரத்தின் மீது ஏறிய salzburg 33 வயது பெண்...

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...

ஆஸ்திரேலியாவில் தரமற்ற சன்ஸ்கிரீன் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் 30க்கும் மேற்பட்ட zinc சன்ஸ்கிரீன் பிராண்டுகள் அடிப்படை SPF சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. SPF 50 என்று விளம்பரப்படுத்தப்படும் சன்ஸ்கிரீனில் உண்மையில் SPF 20 மட்டுமே...

சட்டவிரோத வேலைவாய்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள இங்கிலாந்து

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக பணிபுரிந்த சீன, இந்திய மற்றும் வங்காளதேச டெலிவரி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுகிறார்கள். சட்டவிரோத தொழிலாளர்கள் 8,232 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது...

ஆஸ்திரேலியாவில் தரமற்ற சன்ஸ்கிரீன் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் 30க்கும் மேற்பட்ட zinc சன்ஸ்கிரீன் பிராண்டுகள் அடிப்படை SPF சோதனையில் தோல்வியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. SPF 50 என்று விளம்பரப்படுத்தப்படும் சன்ஸ்கிரீனில் உண்மையில் SPF 20 மட்டுமே...