Newsவரவு செலவுத் திட்டம் ரணில் முன்வைத்த முக்கிய விடயங்கள்

வரவு செலவுத் திட்டம் ரணில் முன்வைத்த முக்கிய விடயங்கள்

-

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

வரி அதிகரிப்பை மேற்கொண்டு அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வற் வரியை 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி அறிவித்த முக்கிய விடயங்கள்

*வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

*வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்

*சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க யோசனை.

*அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும்.
தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும்

*வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

*வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்.

*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும். தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும். என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Latest news

சிங்கப்பூர் மற்றும் பாலி தீவுகளுடன் இணைக்கத் தயாராக உள்ள Karratha விமான நிலையம்

மேற்கு ஆஸ்திரேலியாவின் Karratha பிராந்திய விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்த புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பில்பாரா பகுதியில் உள்ள மக்கள் சிங்கப்பூர் மற்றும் பாலி...

விக்டோரியா கடற்கரையில் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான திமிங்கல புதைபடிவம் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Ocean Grove கடற்கரையில் 20 மில்லியன் ஆண்டுகள் பழமையான மிகவும் அரிதான திமிங்கல புதைபடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மணல் அகற்றப்பட்டபோது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப்...

கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவில் தொற்று நோய் அபாயம்

மேற்கு ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தட்டம்மை அபாயம் குறித்து சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பெர்த்தில் கிறிஸ்துமஸ் கரோல் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவருக்கு தட்டம்மை நோய்...

இலங்கையில் மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் வழங்கும் Ditwah புயல் வெள்ள நிவாரணம்

இலங்கையில் மலையகம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு Ditwah சூறாவளி வெள்ள நிவாரணம் குறித்த புதுப்பிப்பு - மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் ($2500) இந்தக்...

மிகப்பெரிய போராட்டத்திற்கு தயாராகும் மெல்பேர்ண்

அடுத்த திங்கட்கிழமை மெல்பேர்ணில் நடைபெறவிருக்கும் சியோனிச எதிர்ப்புப் போராட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு யூதத் தலைவர்கள் விக்டோரியன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். பேரணியில் கலந்து கொள்ளும் மக்கள்...

சிட்னியில் தொடர்ந்து சுற்றி வரும் போலீஸ் ஹெலிகாப்டர்கள் 

இந்த நாட்களில் சிட்னிக்கு மேலே வானத்தில் போலீஸ் ஹெலிகாப்டர்கள் ஒரு பொதுவான காட்சியாகிவிட்டன. சந்தேகத்திற்கிடமான நடத்தையை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிட்னியின் கிழக்குப் பகுதியில் போலீஸ்...