Newsவரவு செலவுத் திட்டம் ரணில் முன்வைத்த முக்கிய விடயங்கள்

வரவு செலவுத் திட்டம் ரணில் முன்வைத்த முக்கிய விடயங்கள்

-

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் திருத்தத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

வரி அதிகரிப்பை மேற்கொண்டு அரச வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வற் வரியை 12 வீதத்தில் இருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி அறிவித்த முக்கிய விடயங்கள்

*வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

*வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்

*சுயாதீனமாக செயற்படும் தேசிய கடன் முகாமைத்துவ நிறுவனமொன்றை திறைசேரியின் கீழ் ஸ்தாபிக்க யோசனை.

*அரச சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கும் மின்சக்தியில் இயங்கும் வாகனங்களை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும்.
தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும்

*வரி சேகரிப்பை ஒழுங்குபடுத்தி அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

*வரி வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் பணம் அச்சிடுவதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
*பணவீக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்

*சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்ததும் அது குறித்து பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படும்.

*அரச மற்றும் பகுதியளவிலான அரச துறைகளில் ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்படும். தற்போது சேவையிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட சகலரையும் 2022 டிசம்பருக்குள் ஓய்வுபெற வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

*18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான யோசனை முன்வைக்கப்படும். என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

Latest news

வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவில் சுகாதாரப் பராமரிப்பு வேலை வாய்ப்புகள்

முதன்முறையாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒரு ஆரம்ப சுகாதாரப் பராமரிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த விளம்பரத் திட்டத்தின் நோக்கம், மருத்துவமனைகளில் கிடைக்கும் ஆரம்ப சுகாதார சேவைகள் மற்றும் தொழில்களின்...

இளம் ஆஸ்திரேலியர்களுக்கு தூக்கம் மிக அவசியம் – சுகாதாரத் துறை

இளைஞர்களுக்கு அதிக தூக்கம் தேவை என்று ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே மோசமான தூக்கப் பழக்கம் அவர்களின் தூக்கத்தைக் கெடுப்பதாக ராயல் மருத்துவமனை...

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய விமான நிறுவனத்திற்கு என்ன நடக்கும்?

ஆஸ்திரேலியாவில் Rex Airlines விற்பனை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருப்பினும், இதுவரை எந்த தனியார் முதலீட்டாளர்களும் விமான நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை. இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் எந்த தனியார்...

Credit Card பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் அத்தியாவசிய கொள்முதல்களுக்கு மட்டுமே பணத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. டிஜிட்டல் கொடுப்பனவுகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், பணத்தைப் பயன்படுத்தும்...

Credit Card பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் அத்தியாவசிய கொள்முதல்களுக்கு மட்டுமே பணத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. டிஜிட்டல் கொடுப்பனவுகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், பணத்தைப் பயன்படுத்தும்...

Australian Post உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள முக்கிய வங்கிகள்

நாட்டின் மூன்று முக்கிய வங்கிகள் Australian Post உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, Commonwealth, NAB மற்றும் Westpac வங்கிகள் Australian Post உடன்...