Newsஇலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

-

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதற்கமைய, 35 நாடுகளின் பிரஜைகளுக்கு இது பொருந்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

05 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் எத்தனை சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு பயணிக்க கூடிய வகையில் இந்த வீசா வழங்கப்படும்.

இதன் மூலம் இலங்கையில் அதிகபட்சமாக 6 மாதங்கள் ஒரே நேரத்தில் தங்க முடியும். இதற்கு முன்னர் 30 நாட்களுக்கு மாத்திரமே இந்த விசா மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது இலங்கையால் வழங்கப்பட்ட ஒரு வருட பல நுழைவு விசாவிற்கும் 06 மாதங்களுக்கு வழங்கப்படும் ஒற்றை நுழைவு வீசாவிற்கும் மேலதிகமாக இந்த புதிய வீசா வழங்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...