Newsஇலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

இலங்கையில் அமுலுக்கு வரும் புதிய விசா நடைமுறை!

-

இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதற்கமைய, 35 நாடுகளின் பிரஜைகளுக்கு இது பொருந்தும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

05 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் எத்தனை சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு பயணிக்க கூடிய வகையில் இந்த வீசா வழங்கப்படும்.

இதன் மூலம் இலங்கையில் அதிகபட்சமாக 6 மாதங்கள் ஒரே நேரத்தில் தங்க முடியும். இதற்கு முன்னர் 30 நாட்களுக்கு மாத்திரமே இந்த விசா மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

தற்போது இலங்கையால் வழங்கப்பட்ட ஒரு வருட பல நுழைவு விசாவிற்கும் 06 மாதங்களுக்கு வழங்கப்படும் ஒற்றை நுழைவு வீசாவிற்கும் மேலதிகமாக இந்த புதிய வீசா வழங்கப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...