Newsஇலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி - நீதிமன்றம் வழங்கிய...

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

-

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா செல்ல முற்பட்ட கர்ப்பிணி பெண் உட்பட இரண்டு சிறுவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மற்றவர்களை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் ரஸாக் முன்னிலையில் நேற்று(30) குறித்த சந்தேகநபர்கள் 31 பேரையும் முன்னிலைப்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை கடற் படையினரால் கைது செய்யப்பட்ட 31 பேரில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்ணொருவரும் கர்ப்பிணி தாய் ஒருவரும் அவருடைய இரண்டு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேலையில், திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் ,எச்சரிக்கை செய்து கர்ப்பிணிப் பெண்ணையும் அவருடைய இரண்டு சிறார்களையும் இரண்டு லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...