Newsஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு 4000 டொலர் வழங்கும் அரசாங்கம்

ஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு 4000 டொலர் வழங்கும் அரசாங்கம்

-

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு முறை உதவித்தொகையாக 4000 டொலர் வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த உதவித்தொகை அவர்களின் ஓய்வூதியத்தில் தலையிடாது என்று கான்பெராவில் நடைபெற்ற வேலை வாய்ப்புகள் மற்றும் திறன்கள் மாநாட்டின் முடிவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

இந்த உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை போக்குவது தொடர்பான 36 முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது ஓய்வுபெற்ற ஆஸ்திரேலியர் பெறக்கூடிய அதிகபட்ச ஆண்டு சம்பளம் 7,800 டொலராகும்.

ஆனால், அதிக நேரம் வேலை செய்ய விரும்பும் ஓய்வு பெற்றவர்களை இந்த விதிமுறை பாதிக்காத வகையில், விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு தற்காலிகமானது என்றும், அடுத்த வருடம் ஜூன் மாதம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

இதன் மூலம் அரசாங்கம் தாங்க வேண்டிய கூடுதல் தொகை 55 மில்லியன் டொலர்களாகும்.

Latest news

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

தீப்பிழம்புகளுக்கு மத்தியில் ஒரு கப்பல் கொள்கலனில் தங்கியிருந்த மூவர் மீட்பு

விக்டோரியாவிலிருந்து ஒரு நபர் தனது வீடு காட்டுத்தீயில் எரிந்து கொண்டிருந்தபோது, ​​ஒரு கப்பல் கொள்கலனுக்குள் ஒளிந்து கொண்டு உயிர் பிழைத்ததைப் பற்றிய ஒரு கதை பதிவாகியுள்ளது. Longwood-இல்...

சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து இன்ஸ்டாகிராம் பயனர்கள் எச்சரிக்கை

கடவுச்சொல் மீட்டமைப்புகளைக் கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள் குறித்து மில்லியன் கணக்கான பயனர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இன்ஸ்டாகிராம் எச்சரித்துள்ளது. கடவுச்சொல் மீட்டமைப்பு மின்னஞ்சல்களைக் கோராமலேயே பெறுவது குறித்து பயனர்கள்...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

குயின்ஸ்லாந்திற்குள் நுழையும் Koji புயல் – 2 பகுதிகளுக்கு திடீர் வெள்ள அபாயம்

வெப்பமண்டல சூறாவளி Koji குயின்ஸ்லாந்து மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் Ayr மற்றும் Bowen-ஐ சுற்றியுள்ள குடியிருப்பாளர்கள் மிக அதிக மழையால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இது...

புதிய Influenza தொற்றுநோய் – காய்ச்சல் நோயாளிகள் அதிகரிப்பு

'Super-K' அல்லது subclade-K எனப்படும் புதிய இன்ஃப்ளூயன்ஸா திரிபு, காய்ச்சல் நோயாளிகளில் அசாதாரண அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் கூறுகின்றனர். WHO ஒத்துழைப்பு மையத்தின் இன்ஃப்ளூயன்ஸா...