Newsஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு 4000 டொலர் வழங்கும் அரசாங்கம்

ஆஸ்திரேலியாவில் பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு 4000 டொலர் வழங்கும் அரசாங்கம்

-

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பணிபுரிய விரும்பும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு முறை உதவித்தொகையாக 4000 டொலர் வழங்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த உதவித்தொகை அவர்களின் ஓய்வூதியத்தில் தலையிடாது என்று கான்பெராவில் நடைபெற்ற வேலை வாய்ப்புகள் மற்றும் திறன்கள் மாநாட்டின் முடிவில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

இந்த உச்சி மாநாட்டில் ஆஸ்திரேலியாவில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை போக்குவது தொடர்பான 36 முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தற்போது ஓய்வுபெற்ற ஆஸ்திரேலியர் பெறக்கூடிய அதிகபட்ச ஆண்டு சம்பளம் 7,800 டொலராகும்.

ஆனால், அதிக நேரம் வேலை செய்ய விரும்பும் ஓய்வு பெற்றவர்களை இந்த விதிமுறை பாதிக்காத வகையில், விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு தற்காலிகமானது என்றும், அடுத்த வருடம் ஜூன் மாதம் நீக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

இதன் மூலம் அரசாங்கம் தாங்க வேண்டிய கூடுதல் தொகை 55 மில்லியன் டொலர்களாகும்.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...