Newsமீண்டும் நாடு திரும்பிய கோட்டாபய - பாதுகாப்பு தீவிரம்

மீண்டும் நாடு திரும்பிய கோட்டாபய – பாதுகாப்பு தீவிரம்

-

கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வந்த மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் உச்சமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்‌ஷ, அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 13ஆம் திகதி அதிகாலை, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

73 வயதான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது மனைவி அயோமா ராஜபக்‌ஷ மற்றும் 2 பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் நாட்டை விட்டுச் சென்றிருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலைதீவின் மாலி நகருக்கு செல்வதற்காக விமானப்படை விமானமொன்று அவர்களுக்கு வழங்கப்பட்டதாக, இலங்கை விமானப்படை அறிவித்திருந்தது.

மாலைதீவு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார்.

சிங்கப்பூர் சென்ற அவர், அங்கு தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்தார்.

சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கியிருக்க அனுமதி பெற்றிருந்த நிலையில், அக்காலக் கெடு நிறைவடைந்த நிலையில் மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

சுமார் 4 வாரங்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த அவர், கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சுமார் 3 வாரங்கள் தாய்லாந்தில் தங்கியிருந்த அவர், நேற்று (02) இரவு 11.48 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான SU-468 எனும் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், கோட்டாபய ராஜபக்‌ஷவை வரவேற்க விமான நிலையத்தில் ஒரு சில அமைச்சர்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

இன்று முதல் குறைந்த விலையில் iPhone 16E வாங்க வாய்ப்பு.

ஆப்பிள் தனது புதிய உறுப்பினரை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய மொபைல் போனான ஐபோன் 16E-ஐ நேற்று வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டது. ஐபோன் 16 மாடலின் புதிய...

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் மீண்டும் உயர்வு

நாட்டில் வேலையின்மை விகிதத்தில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்ட காலாண்டு தரவு அறிக்கையின் மூலம் இந்த உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஜனவரி மாதத்தில்...

ஆஸ்திரேலியாவில் பரவும் அரிய வகை புற்றுநோய்

ஆஸ்திரேலியாவில் சர்கோமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நோய்க்கான புதிய புற்றுநோய் எதிர்ப்பு சிகிச்சைகளை நோயாளிகள் தேட ஊக்குவிப்பதே இதன் நோக்கமாக இருக்கும். சர்கோமா...

வேலை வெட்டுக்களுக்கு தயாராகி வரும் விக்டோரியா அரசாங்கம்

விக்டோரியா அரசாங்கம் வேலை வெட்டுக்களுக்கு தயாராகி வருவதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பொதுத்துறைகளை மறுஆய்வு செய்வதற்கான உத்தரவால் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா...

வேலை வெட்டுக்களுக்கு தயாராகி வரும் விக்டோரியா அரசாங்கம்

விக்டோரியா அரசாங்கம் வேலை வெட்டுக்களுக்கு தயாராகி வருவதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பொதுத்துறைகளை மறுஆய்வு செய்வதற்கான உத்தரவால் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா...

ஆஸ்திரேலியாவின் மிகவும் கவர்ச்சியான மாநிலம் எது தெரியுமா?

ஆஸ்திரேலியாவின் கவர்ச்சிகரமான மாநிலமாக டாஸ்மேனியா பெயரிடப்பட்டுள்ளது. பாலியல் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பாலியல் பொம்மைகளை வாங்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை விட டாஸ்மேனியாவின் மக்கள்...