Newsமீண்டும் நாடு திரும்பிய கோட்டாபய - பாதுகாப்பு தீவிரம்

மீண்டும் நாடு திரும்பிய கோட்டாபய – பாதுகாப்பு தீவிரம்

-

கடந்த ஜூலை மாதம் நாட்டை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை வந்தடைந்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடம்பெற்று வந்த மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் உச்சமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 09ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறிய கோட்டாபய ராஜபக்‌ஷ, அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 13ஆம் திகதி அதிகாலை, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானம் மூலம் மாலைதீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

73 வயதான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது மனைவி அயோமா ராஜபக்‌ஷ மற்றும் 2 பாதுகாவலர்களுடன் விமானப்படை விமானத்தில் நாட்டை விட்டுச் சென்றிருந்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, மாலைதீவின் மாலி நகருக்கு செல்வதற்காக விமானப்படை விமானமொன்று அவர்களுக்கு வழங்கப்பட்டதாக, இலங்கை விமானப்படை அறிவித்திருந்தது.

மாலைதீவு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜூலை 14ஆம் திகதி மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்தார்.

சிங்கப்பூர் சென்ற அவர், அங்கு தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்தார்.

சிங்கப்பூரில் 14 நாட்கள் தங்கியிருக்க அனுமதி பெற்றிருந்த நிலையில், அக்காலக் கெடு நிறைவடைந்த நிலையில் மேலும் 14 நாட்கள் தங்கியிருக்க அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டது.

சுமார் 4 வாரங்கள் சிங்கப்பூரில் தங்கியிருந்த அவர், கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி தாய்லாந்து சென்றடைந்தார்.

இதனைத் தொடர்ந்து சுமார் 3 வாரங்கள் தாய்லாந்தில் தங்கியிருந்த அவர், நேற்று (02) இரவு 11.48 மணியளவில் சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான SU-468 எனும் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும், கோட்டாபய ராஜபக்‌ஷவை வரவேற்க விமான நிலையத்தில் ஒரு சில அமைச்சர்கள் வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற ஒரு திட்டம்

விக்டோரியாவில் உள்ள MacKillop Education பள்ளி, பள்ளிக்குச் செல்லத் தயங்கும் சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களை ஈர்க்க ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. Bitter Sweet Café...

விக்டோரியாவில் 2026ம் ஆண்டில் நிறுத்தப்படும் எரிவாயு விநியோகம்

2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விக்டோரியாவில் உள்ள 10 கிராமப்புற நகரங்களில் வசிப்பவர்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) விநியோகத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக Solstice...

ஆஸ்திரேலிய குழந்தைகளுக்கு புதிய நண்பராக மாறியுள்ள AI

பல ஆஸ்திரேலிய குழந்தைகள் AI தொழில்நுட்பத்தை நோக்கி அதிகளவில் திரும்புவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Norton வெளியிட்டுள்ள சைபர் பாதுகாப்பு நுண்ணறிவு அறிக்கை இது குறித்த தகவல்களை...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் குறைந்துள்ள விவாகரத்து விகிதம்

விவாகரத்து சட்ட சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து ஆஸ்திரேலியா அதன் மிகக் குறைந்த விவாகரத்து விகிதத்தைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில், 16...

அடிலெய்டு காவல்துறைக்கு 251 முறை போன் செய்த நபர்

எட்டு மணி நேரத்தில் காவல்துறையினருக்கு 251 அச்சுறுத்தும் தொலைபேசி அழைப்புகளைச் செய்ததாகக் கூறப்படும் அடிலெய்டு நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  நேற்று மாலை 4.45 மணி முதல்...