Breaking Newsகனடாவில் பதற்றம் - கத்தியால் குத்தப்பட்டு 10 பேர் கொலை

கனடாவில் பதற்றம் – கத்தியால் குத்தப்பட்டு 10 பேர் கொலை

-

கனடாவில், மத்திய மாகாணமான சஸ்காட்செவன் பகுதியில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உள்ளது.

ஜேம்ஸ் ஸ்மித் க்ரீ மற்றும் வெல்டன் மாகாணங்கள் உட்பட 13 வெவ்வேறு இடங்களில் இருந்து கத்தி தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது மிக பயங்கரமான கத்திக்குத்து தாக்குதல் என பொலிஸ் மா அதிபர் ரோண்டா பிளாக்மோர் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இரு சகோதரர்கள் எனவும் பொலிஸ் மா அதிபர் ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் விளக்கமளித்துள்ளார்.

31 வயதான டாமியன் சாண்டர்சன் மற்றும் 30 வயதான மைல்ஸ் சாண்டர்சன் என அழைக்கப்படும் சந்தேக நபர்கள் தற்போது பொலிஸாரிடமிருந்து தப்பி ஓடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்தின் பேரில் இருவரையும் கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு சந்தேக நபர்களும் மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் எனவும், அவர்களிடம் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளனர். சஸ்காட்செவன் பகுதியில் வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

அவர்கள் ஏன் இந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்பதை பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

Latest news

2025-26 நிதியாண்டில் அழைத்து வரப்படும் நிரந்தர குடியேறிகள்

2025-26 நிதியாண்டில் 185,000 நிரந்தர குடியிருப்பாளர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் Tony Burke உறுதிப்படுத்தியுள்ளார். குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தப்...

பிரபலமான குழந்தைகள் சாதனம் ஒன்றை பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவிப்பு

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), பிரபலமான குழந்தை பூஸ்டர் இருக்கை தயாரிப்பிற்கு அவசரகால திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே 1...

காஸாவில் அதிகரிக்கும் பட்டினிச்சாவு

காஸாவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் 130 குழந்தைகள் உட்பட இதுவரை 361 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போருக்கு இடையிலும் காஸா மக்களுக்குத்...

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் இடம்பிடித்த ஆஸ்திரேலியா

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் ஆஸ்திரேலியா 5வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் குவாண்டாஸ் விமானமும், அமெரிக்காவின்...

World Surf League பட்டத்தை வென்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய Surfer Molly Picklum தனது முதல் உலக Surf League சாம்பியன்ஷிப்பை வென்றார். பிஜியின் Cloudbreak கடற்கரையில் நடைபெற்ற உலக Surf League இறுதிப் போட்டியில்...

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் இடம்பிடித்த ஆஸ்திரேலியா

உலகின் மிக நீண்ட விமானப் பயணங்களில் ஆஸ்திரேலியா 5வது மற்றும் 4வது இடத்தைப் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பெர்த்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் குவாண்டாஸ் விமானமும், அமெரிக்காவின்...