Newsஉக்ரேன் போர்க்களத்தில் ஆஸ்திரேலியர் பலி

உக்ரேன் போர்க்களத்தில் ஆஸ்திரேலியர் பலி

-

உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.

ஜெட் வில்லியம் டனகே செலுத்திக்கொண்டிருந்த மருத்துவ வாகனத்தை ரஷ்ய படையினர் இலக்குவைத்தனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜெட் தனது வாழ்நாளில் ஏனையவர்களிற்கு உதவ முயன்றார் நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடியதை விட அதிக உதவிகளை அவர் குறுகிய காலத்தில் செய்தார் என குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் உலகின் பல பகுதிகளிற்கு சென்றுள்ளார் உலகம் முழுவதும் நண்பர்கள் உள்ளனர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உக்ரேனில் உள்ள அவரது சகாக்கள் ஜெட்டினை தங்கள் அணியின் முதுகெலும்பு என வர்ணித்துள்ளனர் தாங்கள் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை வைக்ககூடிய நபர் என வர்ணித்துள்ளனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவிற்கான உக்ரேனின் தூதுவரும் கொல்லப்பட்டவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Latest news

30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய விமான நிறுவனத்திற்கு என்ன நடக்கும்?

ஆஸ்திரேலியாவில் Rex Airlines விற்பனை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருப்பினும், இதுவரை எந்த தனியார் முதலீட்டாளர்களும் விமான நிறுவனத்தை வாங்க முன்வரவில்லை. இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் எந்த தனியார்...

Credit Card பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் அத்தியாவசிய கொள்முதல்களுக்கு மட்டுமே பணத்தைப் பயன்படுத்துவதற்கான திட்டத்தை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. டிஜிட்டல் கொடுப்பனவுகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், பணத்தைப் பயன்படுத்தும்...

Australian Post உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள முக்கிய வங்கிகள்

நாட்டின் மூன்று முக்கிய வங்கிகள் Australian Post உடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. அதன்படி, Commonwealth, NAB மற்றும் Westpac வங்கிகள் Australian Post உடன்...

பூனை போல நடந்து கொண்ட ஆஸ்திரேலிய ஆசிரியர்

வகுப்பறையில் பூனை போல நடந்து கொண்ட ஒரு ஆசிரியர் பற்றிய செய்திகள் குயின்ஸ்லாந்திலிருந்து வந்துள்ளன. குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் இந்த ஆசிரியை, தனது...

ஆஸ்திரேலியாவிற்கான புதிய சாலை வரி முறை அறிமுகம்

ஆஸ்திரேலியாவில் சாலைகளுக்கு ஒரு புதிய வரிக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்று நிதி மதிப்பாய்வு அறிக்கை அறிவிக்கிறது. கடந்த இரண்டு தசாப்தங்களாக எரிபொருள் மீதான வரி வருவாய்...

பிணையில் விடுவிக்கப்பட்ட விக்டோரிய சிறுவன் மீண்டும் கைது!

50 தனித்தனி குற்றச்சாட்டுகளில் பிணையில் விடுவிக்கப்பட்ட விக்டோரியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவரை இந்த முறை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பதினைந்து வயது சிறுவன் 7 வாகனத்...