Newsஉக்ரேன் போர்க்களத்தில் ஆஸ்திரேலியர் பலி

உக்ரேன் போர்க்களத்தில் ஆஸ்திரேலியர் பலி

-

உக்ரேன் போர்க்களத்தில் மருத்துவபணிகளில் ஈடுபட்டிருந்த ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்தின் தென்பகுதி நகரான நனாங்கோவை சேர்ந்த ஜெட் வில்லியம் டனகே என்ற 27 வயது நபர் உக்ரேனின் இசியம் பகுதியில் கொல்லப்பட்டுள்ளார்.

ஜெட் வில்லியம் டனகே செலுத்திக்கொண்டிருந்த மருத்துவ வாகனத்தை ரஷ்ய படையினர் இலக்குவைத்தனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜெட் தனது வாழ்நாளில் ஏனையவர்களிற்கு உதவ முயன்றார் நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் செய்யக்கூடியதை விட அதிக உதவிகளை அவர் குறுகிய காலத்தில் செய்தார் என குடும்பத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

அவர் உலகின் பல பகுதிகளிற்கு சென்றுள்ளார் உலகம் முழுவதும் நண்பர்கள் உள்ளனர் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

உக்ரேனில் உள்ள அவரது சகாக்கள் ஜெட்டினை தங்கள் அணியின் முதுகெலும்பு என வர்ணித்துள்ளனர் தாங்கள் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை வைக்ககூடிய நபர் என வர்ணித்துள்ளனர் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவிற்கான உக்ரேனின் தூதுவரும் கொல்லப்பட்டவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Latest news

புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் முன்மொழியப்பட்ட புதிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டுவசதித் திட்டம் Callala விரிகுடா மற்றும் Callala கடற்கரைப்...

விக்டோரியா நீர்த்தேக்கங்களில் பிரச்சனையாக மாறியுள்ள கெண்டை மீன்கள்

விக்டோரியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஐரோப்பிய கெண்டை மீன்களின் (European carp) அதிகப்படியான பரவல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய கெண்டை மீன் படையெடுப்பு ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அமைக்கவுள்ள புதிய வீடுகள்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள Kingswood கோல்ஃப் மைதானத்தில் 941 புதிய வீடுகளைக் கட்ட விக்டோரியன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் 15...

ஆஸ்திரேலியா முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் காய்ச்சல் நோயாளிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த தடுப்பூசி...

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும்  போராட்டம்

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக "No Kings" என்ற பதாகையின் கீழ் அமெரிக்கா முழுவதும் மக்கள் பாரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் நாடு...

சர்வதேச மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் உயர்தர பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கான புதிய கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்த அல்பானீஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உயர்கல்வியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்...