Newsகோட்டாபயவின் தவறான முடிவால் ஏற்பட்ட விபரீதம் - அம்பலப்படுத்திய பிரபலம்

கோட்டாபயவின் தவறான முடிவால் ஏற்பட்ட விபரீதம் – அம்பலப்படுத்திய பிரபலம்

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எடுத்த தவறான தீர்மானம் காரணமாகவே பெரும்போகச் செய்கை உற்பத்தி பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தள்ளார்.

அவர் எடுத்த கொள்கை தீர்மானம் தவறானது அல்ல. ஆனால் அந்த கொள்கையை ஒரேயடியாக செயற்படுத்தியமையே தவறாகும். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தமையால், இந்த கருத்துக்களை அப்போது தாம் கூறவில்லை.

கோட்டாபய ராஜபக்ச, இரசாயன உரத்தை தடை செய்ய முடிவெடுத்தபோது, அதனை தாம் எதிர்த்ததாக குறிப்பிட்ட மஹிந்தாநந்த,எனினும் அது தமது விவசாய அமைச்சுக்கு பொறுப்பானது அல்ல.

அதற்கு முன்னாள் ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச பொறுப்பாக இருப்பார் என்றும் சுகாதார அமைச்சும், ஜனாதிபதி செயலணியும் இவற்றை கண்காணிக்கும் என்றும் கோட்டாபய என்னிடம் கூறிார்.

எனவே தமது அமைச்சின் கீழ் இந்த விடயம் வராததன் காரணமாக, நான் அதில் தலையிடவில்லை.

எனினும் இறுதியில் கோட்டாபய ஜனாதிபதிக்காக தாம் இந்த பிரச்சினையில் அதிகமாக பழிச்சொல்லுக்கு உள்ளானது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி எடுத்த தீர்மானம் காரணமாகவே இலங்கையில் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டமைக்கான காரணம், 2015ஆம் ஆண்டுக்காலத்தில் இருந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விளைவாகும்.

இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் ஏற்பட்ட விளைவுகளை காணப்பதற்கு இன்னும் சில காலம் செல்லும்” என்று மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்தார்.

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

மெல்பேர்ணில் உள்ள Coles-இல் திருடர்களைப் பிடிக்க புதிய வழிகள்

ஆஸ்திரேலியாவின் முன்னணி பல்பொருள் அங்காடி சங்கிலிகளில் ஒன்றான Coles, திருடர்களைப் பிடிக்க பல நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு முறைகளை சோதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இது மெல்பேர்ணில் உள்ள...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...