Newsகோட்டாபயவின் தவறான முடிவால் ஏற்பட்ட விபரீதம் - அம்பலப்படுத்திய பிரபலம்

கோட்டாபயவின் தவறான முடிவால் ஏற்பட்ட விபரீதம் – அம்பலப்படுத்திய பிரபலம்

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எடுத்த தவறான தீர்மானம் காரணமாகவே பெரும்போகச் செய்கை உற்பத்தி பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தள்ளார்.

அவர் எடுத்த கொள்கை தீர்மானம் தவறானது அல்ல. ஆனால் அந்த கொள்கையை ஒரேயடியாக செயற்படுத்தியமையே தவறாகும். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தமையால், இந்த கருத்துக்களை அப்போது தாம் கூறவில்லை.

கோட்டாபய ராஜபக்ச, இரசாயன உரத்தை தடை செய்ய முடிவெடுத்தபோது, அதனை தாம் எதிர்த்ததாக குறிப்பிட்ட மஹிந்தாநந்த,எனினும் அது தமது விவசாய அமைச்சுக்கு பொறுப்பானது அல்ல.

அதற்கு முன்னாள் ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச பொறுப்பாக இருப்பார் என்றும் சுகாதார அமைச்சும், ஜனாதிபதி செயலணியும் இவற்றை கண்காணிக்கும் என்றும் கோட்டாபய என்னிடம் கூறிார்.

எனவே தமது அமைச்சின் கீழ் இந்த விடயம் வராததன் காரணமாக, நான் அதில் தலையிடவில்லை.

எனினும் இறுதியில் கோட்டாபய ஜனாதிபதிக்காக தாம் இந்த பிரச்சினையில் அதிகமாக பழிச்சொல்லுக்கு உள்ளானது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி எடுத்த தீர்மானம் காரணமாகவே இலங்கையில் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டமைக்கான காரணம், 2015ஆம் ஆண்டுக்காலத்தில் இருந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விளைவாகும்.

இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் ஏற்பட்ட விளைவுகளை காணப்பதற்கு இன்னும் சில காலம் செல்லும்” என்று மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்தார்.

Latest news

விக்டோரியாவில் பெண் தலைமைத்துவத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம் அதன் நகராட்சி மன்றங்களில் பெண்களின் தலைமையை அதிகரிக்க தொடர்ச்சியான புதிய திட்டங்களைத் திட்டமிட்டுள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் நகராட்சி மன்றங்களில் 50% கவுன்சில் தலைமைப்...

சர்வதேச முதலீட்டை நோக்கித் திரும்பும் ஆஸ்திரேலிய வணிக ஜாம்பவான்கள்

ஆஸ்திரேலியாவில் நன்கு அறியப்பட்ட சொத்து முதலீட்டாளரான Scott O’Neill, நியூசிலாந்தில் தனது புதிய முதலீடுகளைச் செய்யத் தயாராகி வருகிறார். ஆஸ்திரேலிய சொத்துச் சந்தையில் விலை உயர்வு/வட்டி விகிதங்கள்...

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்...

சமூக ஊடகங்களில் மருத்துவ ஆலோசனை பெறும் இளம் ஆஸ்திரேலியர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையின் புதிய ஆராய்ச்சி, பல இளம் ஆஸ்திரேலியர்கள் சமூக ஊடகங்களிலிருந்து சுகாதார ஆலோசனையைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மனநலம்,...

சமூக ஊடகங்களில் மருத்துவ ஆலோசனை பெறும் இளம் ஆஸ்திரேலியர்கள்

மெல்பேர்ணில் உள்ள ராயல் குழந்தைகள் மருத்துவமனையின் புதிய ஆராய்ச்சி, பல இளம் ஆஸ்திரேலியர்கள் சமூக ஊடகங்களிலிருந்து சுகாதார ஆலோசனையைப் பெறுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, மனநலம்,...

ஆஸ்திரேலியாவிற்கு குறைந்த விலை பொருட்களை வழங்கும் ஒரு கனேடிய நிறுவனம்

கனேடிய தள்ளுபடி சில்லறை விற்பனையாளர் Dollarama, ஆஸ்திரேலிய சங்கிலித் தொடர் நிறுவனமான The Reject Shop-ஐ கையகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் $259 மில்லியன் மதிப்புடையது, மேலும்...