Newsகோட்டாபயவின் தவறான முடிவால் ஏற்பட்ட விபரீதம் - அம்பலப்படுத்திய பிரபலம்

கோட்டாபயவின் தவறான முடிவால் ஏற்பட்ட விபரீதம் – அம்பலப்படுத்திய பிரபலம்

-

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, எடுத்த தவறான தீர்மானம் காரணமாகவே பெரும்போகச் செய்கை உற்பத்தி பாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த அலுத்கமகே இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தள்ளார்.

அவர் எடுத்த கொள்கை தீர்மானம் தவறானது அல்ல. ஆனால் அந்த கொள்கையை ஒரேயடியாக செயற்படுத்தியமையே தவறாகும். கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தமையால், இந்த கருத்துக்களை அப்போது தாம் கூறவில்லை.

கோட்டாபய ராஜபக்ச, இரசாயன உரத்தை தடை செய்ய முடிவெடுத்தபோது, அதனை தாம் எதிர்த்ததாக குறிப்பிட்ட மஹிந்தாநந்த,எனினும் அது தமது விவசாய அமைச்சுக்கு பொறுப்பானது அல்ல.

அதற்கு முன்னாள் ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச பொறுப்பாக இருப்பார் என்றும் சுகாதார அமைச்சும், ஜனாதிபதி செயலணியும் இவற்றை கண்காணிக்கும் என்றும் கோட்டாபய என்னிடம் கூறிார்.

எனவே தமது அமைச்சின் கீழ் இந்த விடயம் வராததன் காரணமாக, நான் அதில் தலையிடவில்லை.

எனினும் இறுதியில் கோட்டாபய ஜனாதிபதிக்காக தாம் இந்த பிரச்சினையில் அதிகமாக பழிச்சொல்லுக்கு உள்ளானது.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி எடுத்த தீர்மானம் காரணமாகவே இலங்கையில் ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய ஊட்டச்சத்து குறைப்பாடு ஏற்பட்டமைக்கான காரணம், 2015ஆம் ஆண்டுக்காலத்தில் இருந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் விளைவாகும்.

இந்தநிலையில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் ஏற்பட்ட விளைவுகளை காணப்பதற்கு இன்னும் சில காலம் செல்லும்” என்று மஹிந்தாநந்த அலுத்கமகே தெரிவித்தார்.

Latest news

டன் கணக்கில் உணவை வீசுவதால் ஆஸ்திரேலியர்கள் சந்திக்கும் அபாயங்கள்

ஆஸ்திரேலியர்கள் ஆண்டுதோறும் 7.6 மில்லியன் டன் உணவை வீசுவதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. சராசரி வீட்டிற்கு சுமார் $2,500 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக RMIT பல்கலைக்கழகம்...

விமான டிக்கெட்டுகளில் தள்ளுபடி செய்துள்ள Virgin Australia

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் மீண்டும் பங்குச் சந்தையில் இணைந்ததைத் தொடர்ந்து, விர்ஜின் ஆஸ்திரேலியாவின் பங்கு விலை 8% உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊதிய இழப்புகள் காரணமாக சரிவைச் சந்தித்த...

ஆஸ்திரேலியாவில் போக்குவரத்து விபத்துக்களை அதிகரிக்கும் கைக்கடிகாரம்

வாகனம் ஓட்டும்போது smartwatchகளைப் பயன்படுத்துபவர்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த அபராதங்கள் மாநிலத்தைப் பொறுத்து $125 முதல் $2,000 வரை இருக்கும். வாகனம் ஓட்டும்போது...

போரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் மீட்பு

இஸ்ரேலின் Tel Aviv-இலிருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் துபாயில் தரையிறங்கினர். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் 119 பேரை விமானத்தில் ஏற்றிச்...

போரில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் மீட்பு

இஸ்ரேலின் Tel Aviv-இலிருந்து வெளியேற்றப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் துபாயில் தரையிறங்கினர். ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் 119 பேரை விமானத்தில் ஏற்றிச்...

ஆஸ்திரேலியாவில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்துள்ள பணவீக்கம்

ஆஸ்திரேலிய பணவீக்கம் மூன்றரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. பணவீக்க விகிதம் 2.8 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும்,...