Newsபிரித்தானிய மகாராணியில் உடல் நிலை பாதிப்பு - மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்

பிரித்தானிய மகாராணியில் உடல் நிலை பாதிப்பு – மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்

-

பிரித்தானிய மகாராணி, ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று காலை, மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை அடுத்து, அவர் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்

அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் சார்லஸ் மற்றும் குடும்பத்தினர் பால்மோரலுக்கு பயணம் செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

96 வயதான பிரித்தானிய மகாராணி கடந்த புதன்கிழமை ஒரு மெய்நிகர் ஆலோசனையில் கலந்துக்கொண்டதையடுத்து, அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியால் பிரித்தானியா முழுதும் ஆழ்ந்த கவலையில் இருப்பதாக பிரதமர் லிஸ்ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

தமது எண்ணங்கள் மற்றும் ஒட்டுமொத்த பிரித்தானிய மக்களின் எண்ணங்கள் முழுவதும் இந்நேரத்தில் மகாராணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளதாக பிரதமர் லிஸ்ட்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

Centrelink-க்கு தவறாக விண்ணப்பித்ததால் $15,000 இழந்த ஆஸ்திரேலிய தாய்

Centrelink பெற்றோர் விடுப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட ஒரு பொதுவான தவறு காரணமாக $15,000 இழந்த இரண்டு குழந்தைகளின் ஆஸ்திரேலிய தாய் ஒருவர் தனது அனுபவத்தை சமூக...

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை குறித்து ஆஸ்திரேலிய பொதுமக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடல் வெப்பநிலை கடந்த ஆண்டு சாதனை அளவை எட்டியது. வெப்பமான கடல் நீர்,...

Hoskyn தீவில் மூழ்கும் படகிலிருந்து மீட்கப்பட்ட நான்கு பேர்

தெற்கு Great Barrier Reef-இல் உள்ள ஒரு தொலைதூரத் தீவான Hoskyn தீவு அருகே மூழ்கும் படகிலிருந்து நான்கு பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் Hoskyn...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

வேக வரம்புகளை மீறும் விக்டோரிய ஓட்டுநர்களுக்கு அடுத்த வாரம் விதிக்கப்படும் அபராதம்

விக்டோரியாவில் ஒரு வார காலமாக நடத்தப்பட்ட ஒரு பெரிய போலீஸ் நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் வேக வரம்பை...

சிட்னியில் கயிற்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருக்கும் கூன் முதுகு திமிங்கலம்

சிட்னி துறைமுகத்திற்கு அருகிலுள்ள தெற்கு கடலில் கயிற்றில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருக்கும் ஒரு கூன் முதுகு திமிங்கலம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலிய Cetaceans...