Newsபிரித்தானிய மகாராணியில் உடல் நிலை பாதிப்பு - மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்

பிரித்தானிய மகாராணியில் உடல் நிலை பாதிப்பு – மருத்துவர்கள் வெளியிட்ட தகவல்

-

பிரித்தானிய மகாராணி, ஸ்கொட்லாந்தின் பால்மோரலில் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இன்று காலை, மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை அடுத்து, அவர் மருத்துவ மேற்பார்வையில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்

அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் சார்லஸ் மற்றும் குடும்பத்தினர் பால்மோரலுக்கு பயணம் செய்துள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

96 வயதான பிரித்தானிய மகாராணி கடந்த புதன்கிழமை ஒரு மெய்நிகர் ஆலோசனையில் கலந்துக்கொண்டதையடுத்து, அவரை ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியால் பிரித்தானியா முழுதும் ஆழ்ந்த கவலையில் இருப்பதாக பிரதமர் லிஸ்ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

தமது எண்ணங்கள் மற்றும் ஒட்டுமொத்த பிரித்தானிய மக்களின் எண்ணங்கள் முழுவதும் இந்நேரத்தில் மகாராணி மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ளதாக பிரதமர் லிஸ்ட்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

AI இன் உதவியை நாடும் மெல்பேர்ண் காவல்துறை

மெல்பேர்ண் நகரில் குற்றங்களைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் புதிய தொழில்நுட்ப நடவடிக்கைகளை எடுக்க காவல்துறை தயாராகி வருகிறது . மெல்பேர்ண் நகரில் தற்போது 24 மணி நேர கேமரா...

விக்டோரியர்களின் விமர்சனத்தால் BOM புதிய வலைத்தளத்தை மூடுமா?

பொதுமக்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், புதிய வலைத்தளத்தை தொடர்ந்து இயக்கும் என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் (BOM) கூறுகிறது. புதிய வலைத்தளம் $4 மில்லியன் திட்டமாகும். அணுகல்...

இரட்டிப்பாகும் நாய்கள் மற்றும் பூனைகள் மீதான வரிகள்

விக்டோரியாவில் செல்லப்பிராணி பதிவு கட்டணத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. விக்டோரியாவின் அதிகரித்து வரும் நிகர கடன் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருவதால், பதிவுக் கட்டணத்தை இரட்டிப்பாக்க...

18–20 வயதுடைய இளம் தொழிலாளர்கள் வயதுவந்தோர் ஊதியத்தைப் பெறுவார்களா?

18, 19 மற்றும் 20 வயதுடைய இளம் தொழிலாளர்களுக்கு பெரியவர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க முடிவு செய்யப்பட்டால், அது ஆஸ்திரேலியாவில் இளைஞர்களின் வேலைகள் அழிக்கப்படுவதற்கு வழிவகுக்கும்...

பாலர் பள்ளி குழந்தைகளின் பெற்றோருக்கு உதவும் அரசு

தற்போதுள்ள தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் 100 பாலர் பள்ளிகளைக் கட்ட அரசாங்கம் தயாராகி வருகிறது. இதன் மூலம் பெற்றோர்கள் இரு குழந்தைகளுக்கும் ஒரே இடத்தில் பள்ளிக் கல்வியை வழங்க...

போராட்டங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்களிடமிருந்து அதிகரித்துள்ள புகார்கள்

March for Australia போராட்டங்களைத் தொடர்ந்து, பழங்குடியினர் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கான லைஃப்லைனின் Lifeline’s National Crisis Support Hotline-இற்கு அழைப்புகள் அதிகரித்துள்ளதாக...