Breaking Newsபிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட இளவரசர் சார்லஸ்!

பிரிட்டனின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட இளவரசர் சார்லஸ்!

-

பிரிட்டனின் நீண்ட கால அரசி எலிசபெத் உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை இரவு காலமானதைத் தொடர்ந்து, புதிய மன்னராக இளவரசர் சார்லஸ் (73) அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டார்.

பிரிட்டன் வரலாற்றிலேயே, மிக அதிக வயதில் மன்னரானவர் மூன்றாம் சார்லஸ்தான். பிரிட்டன் அரச தம்பதி மறைந்த பிலிப் – ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் புதிய மன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதை அடுத்து பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற எளிய விழாவில், மன்னராக பிரகடனப்படுத்தப்படுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் மூன்றாம் சார்லஸ்.

எலிசபெத்தின் மறைவை அடுத்து, பட்டத்து இளவரசரான சாா்லஸ் (73) பிரிட்டனின் அடுத்த மன்னரானார். பிரிட்டன் அரச வம்ச சட்டத்தின்படி மூத்த மகனும், இளவரசருமான சாா்லஸ் உடனடியாக அடுத்த மன்னரானார். எனினும் இன்று அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவா் 3 ஆவது சாா்லஸ் என அழைக்கப்படுவாா் என்றும் கூறப்பட்டுள்ளது.

மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் தனது தந்தை ஆறாம் ஜாா்ஜ் மறைவைத் தொடா்ந்து, 1952 இல் அரியணையேறிய இரண்டாம் எலிசபெத், சாதனை அளவாக 70 ஆண்டுகள் அரசியாக இருந்தாா். அவரது ஆட்சிக் காலத்தில் 15 பிரிட்டன் பிரதமா்களை அவா் நிா்வகித்துள்ளாா்.

95 வயதிலும் கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் அவா் மீண்டு வந்தாா்.

இந்நிலையில், கோடைக் கால ஓய்வுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து சென்று, ஸ்காட்லாந்திலுள்ள பால்மரால் அரண்மனையில் அவா் தங்கியிருந்தாா். ராணியின் மகளான இளவரசி ஆன், அவருடன் இருந்தாா்.

பிரிட்டனின் புதிய பிரதமராக செவ்வாய்க்கிழமை பதவியேற்ற லிஸ் டிரஸ்ஸை நேரில் அழைத்து அரசி எலிசபெத் சந்தித்ததுதான் கடைசி நிகழ்வாக அமைந்தது. அதன் பின்னா் எலிசபெத்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் லிஸ் டிரஸ்ஸின் முழு அமைச்சரவை பதவியேற்பு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், எலிசபெத் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வியாழக்கிழமை அறிவித்தது.

ஸ்காட்லாந்தின் பால்மரால் அரண்மனையில் தங்கியிருந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல்நலம் குறித்து மருத்துவா்கள் கவலை தெரிவித்துள்ளதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரது உடல்நிலை குறித்து அறிந்து, ராணியின் மகனும் பட்டத்து இளவரசருமான சாா்லஸ், அவரது மனைவி கமீலா, பேரன் வில்லியம் ஆகியோா் பால்மரால் விரைந்தனா்.

இந்நிலையில், எலிசபெத் காலமாகிவிட்டதாக பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூா்வமாக அறிவித்தது. இதைத்தொடா்ந்து, பக்கிங்ஹாம் அரண்மனையில் ஏராளமானோா் கூடினா்.

எலிசபெத்தின் உடல் லண்டனுக்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. எலிசபெத்தின் கணவா் பிலிப் கடந்த ஆண்டு ஏப்ரல் 9 ஆம் திகதி தனது 99 ஆவது வயதில் காலமானாா்.

Latest news

வெளிநாட்டு குடியேற்றவாசிகளால் 27 மில்லியனைத் தாண்டியுள்ள மக்கள் தொகை

ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக 27 மில்லியனைத் தாண்டியுள்ளது. மேலும்...

ஆஸ்திரேலியாவில் ஒரு குழுவிற்கு எரிபொருள் தள்ளுபடி

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு பிரச்சனைகளால் அவதிப்படும் மூத்த குடிமக்களுக்கு எரிபொருள் தள்ளுபடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநில அரசு அறிமுகப்படுத்திய திட்டத்தின்படி, ஆயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் United...

ஆஸ்திரேலியர்களுக்கான நிவாரணத் தொகைக்கு நாடாளுமன்ற ஒப்புதல்

Parental Leave  எடுத்துள்ள பெற்றோருக்கு ஜூலை 2025 முதல் ஓய்வூதியம் வழங்குவதற்கான முன்மொழிவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், Parental Leave எடுத்த பெற்றோருக்கு வழங்கப்படும் தொகையில்...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வேலையில் மகிழ்ச்சியின்றி இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவின் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் வேலைகளில் மகிழ்ச்சியடையவில்லை என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. வேலைவாய்ப்பு இணையதளம் SEEK வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை, ஆஸ்திரேலிய...

வரும் நாட்களில் மெல்போர்ன் மற்றும் சிட்னி போராட்டங்கள் நடைபெறும் என எச்சரிக்கை

மெல்பேர்ண் மற்றும் சிட்னியில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள் வரும் நாட்களில் தொடரலாம் என்று கட்டுமான, வனத்துறை மற்றும் கடல்சார் தொழிலாளர் சங்கம் (CFMEU) எச்சரித்துள்ளது. வேலையில்...