Newsகடும் நெருக்கடியில் இலங்கை - மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கும் நிலை

கடும் நெருக்கடியில் இலங்கை – மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கும் நிலை

-

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் உணவுப் பணவீக்கம் (உணவு விலை அதிகரிப்பு) 80% ஆக உயர்ந்துள்ளதாகக் காட்டுகிறது.

மே 2022 இல் 58% ஆக இருந்த நாட்டின் உணவுப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் 75.8% ஆக உயர்ந்துள்ளது என்றும் குறியீடு கூறுகிறது.

இதேவேளை, இலங்கையில் சுமார் 57 இலட்சம் மக்கள் போதிய உணவின்றி உள்ளதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இலங்கை மக்கள் கடந்த 70 வருடங்களில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியினால் உருவான இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பொருளாதாரச் சிரமங்களினால் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் மிகவும் சிரமமான நிலைமைகளை எதிர்நோக்கும் பல குடும்பங்கள் பற்றிய செய்திகள் இந்த நாட்களில் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...

WhatsApp குழுவிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறும் புதிய வசதி

WhatsApp செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக...

ஜனவரி 1 முதல் மாறும் கொள்முதல் முறைகள்

2026 ஆம் ஆண்டில் மளிகை மற்றும் எரிபொருள் வணிகங்களுக்கு ஆஸ்திரேலியா பண ஆணையை அறிமுகப்படுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் அறிவித்துள்ளார். அத்தியாவசிய கொள்முதல்களுக்கு பணத்தை ஏற்றுக்கொள்வது...